Friday 23 August 2024

அதில் எனக்கு வெட்கமில்லை!

                                    நான்  இந்திய  வம்சாவளி தான்!  ஆனால்......!

பொதுவாக டாக்டர் மகாதிர் தன்னை இந்திய வம்சாவளி  என்று எந்தக் காலத்திலும் ஒப்புக்கொண்டதில்லை.

அதேபோல இந்தியர்களும் அவரை இந்திய வம்சாவளி  என்று ஏற்றுக் கொண்டதில்லை.  அவர் இந்தியர்களுக்கு அணுசரனையாக  எந்தக் காலத்திலும் நடந்து கொண்டதுமில்லை. காரணம் இந்தியன்  என்றால் அவர் அரசியல் எடுபடாது என்பது அவருக்குத் தெரியும்.

நமக்குத் தெரிந்து அவர் எல்லா காலங்களிலும் இந்தியர்கள் வேண்டாதவர்கள் என்பது போல தான் நடந்து கொண்டிருக்கிறார். இன்றைய இந்தியர்களின் தாழ்நிலைக்குக் காரணம்  நிச்சயமாக டாக்டர் மகாதிர்  முதன்மையான காரணம்.  இவரோடு சேர்ந்து தான் நமது தலைவர்களும் கபடி ஆடினார்கள் என்பது நமக்குத் தெரிந்த கதை தான்!

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  சொந்த அடையாளத்தை மறைப்பவர்கள் எந்தக் காலத்திலும் தான் சொந்தம் கொண்டாடும் இனத்துக்கும் துரோகம் செய்பவர்களாகத் தான் இருப்பார்கள் என்பது மட்டும் உண்மை. 

டாக்டர் மகாதிர் நீண்ட காலம் நாட்டின் பிரதமராக இருந்தவர்.  மலாய்க்காரர்களுக்காக,   பதவிக்கு வருமுன்னர்,  பெரும் போராட்டம் நடத்தியவர்.  எல்லாம் சரிதான்.  ஆனால் மலாய்க்காரர்கள் முன்னேற்றம் அடைந்து விட்டார்களா?  இல்லை என்பது தான் இப்போதுவரை இதற்கான பதில்!  அந்தப் பதிலை நாம் சொல்லவில்லை.  மலாய்க்காரர்களே சொல்லுகிறார்கள் என்பது தான் உண்மை!

வர்த்தகத்தில் பெரிய முன்னேற்றம் இல்லை.  ஆனால் பணம் மட்டும் வாரி இறைக்கப்படுகிறது.  எந்தப் புண்ணியமுமில்லை.  ச்லுகைகள் பொதவில்லை என்கிறார்கள்!  கல்வியிலும் சலுகை வேண்டும் என்கிறார்கள்.  அரசாங்க வேலைகளை நிரப்ப முடிந்தால் போதும்.

அவர் காலத்தில் தான் இலஞ்சம் ஊழல் அனைத்தும் கொடிகட்டிப் பறந்தன என்பதை  மறுப்பதற்கில்லை.   நாட்டின் இன்றைய சூழலுக்குக் காரணம் அவர்  ஒருதலைபட்சமாக  எடுத்த முடிவுகள் தான்.   மலாயக்காரர்கள் முன்னேற வேண்டும் என்பதில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் மற்ற இனத்தவரிடமிருந்து பிடிங்கி தான் அவர்களுக்கு  உதவி செய்ய முடிந்தது.

அவர் தன்னை இந்திய வம்சாவளி என்று கூறாமல் இருந்தாலே அதுவே நமக்குப் பெருமை தான். அவர் மருத்துவ படிப்புக்காக சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் சேரும்போது அவர்  இந்தியர் என்று தான்  அவருடைய அடையாளக்கார்டு கூறுகிறது.   ஒருவேளை அது போலியாகக் கூட இருக்கலாம்!  பதவியில் இருந்தால் அனைத்தையும் மாற்ற முடியுமே!

அவர் யாராக இருந்தால் என்ன? ஆகப்போவது  ஒன்றுமில்லை!

No comments:

Post a Comment