Friday 2 August 2024

ஊழல் பெருச்சாளிகள்!


 ஊழல் பெருச்சாளிகள் யார்?  இன்றைய நிலையில் அரசு சார்ந்த அதிகாரிகளே நமது கண்ணுக்குப் படுகின்றனர். காரணம் அவர்களின் கைது தான் நாளிதழ்களில்  அதிகம் பேசப்படுகின்றது.  

சட்டம் சொல்லுவது என்ன என்று பார்க்கும் போது இலஞ்சம் கொடுப்பவரும் குற்றவாளி, இலஞ்சம் வாங்குபவரும் குற்றவாளி. புரிகிற மொழியில் தான் சொல்லப்பட்டிருக்கின்றது. நமக்கு என்னவோ வாங்குபவரின் வற்புறுத்தலால் தான் கொடுப்பவன் கொடுத்துக் கொண்டிருக்கிறான்  என்று தோன்றுகிறது.

ஆனால் இப்போது இது பிரச்சனையல்ல.  இந்தப் பிரச்சனையில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  யாருக்குச் சொர்க்கம் கிடைக்கும்? கொடுப்பவருக்கா அல்லது வாங்குபவருக்கா? கொடுப்பவன் என்ன நினைக்கிறான்?    "பாவம்! இரண்டு பெண்டாட்டிக்காரன், அவன் எப்படித்தான் சமாளிப்பான்?"  இவன், அவன் மீது அனுதாபம் கொள்கிறான்!  அப்படியென்றால் அவனுக்கு சொர்க்கம் தானே கிடைக்க வேண்டும்?  வாங்குபவன் என்ன சொல்கிறான்?   "அப்பாடா!  டேய்!  நீ நல்லா இருந்தா தான் நான் நல்லா இருக்க முடியும்! அதனால் நீ எப்போதும் நல்லா இருக்க வேண்டும்!'  வாங்குபவன்,  கொடுப்பவனுக்காக "நீ நல்லா இருக்கணும் என்று பிரார்த்தனைச் செய்கிறான்!'  இப்போது கொடுத்தவனுக்கு நல்லதொரு  வேண்டுதல் கிடைக்கிறது.  ஆக, அவனுக்கும்  சொர்க்கம் தான் கிடைக்க வேண்டும்/

இப்போது இரண்டுமே சரிதான்!   வாங்குபவனும் கொடுப்பவனும் ஒருவருக்கொருவர்  விட்டுக் கொடுக்கவில்லை. இருவருமே  தங்களது பிரார்த்தனைகளைக் கடவுளிடம் வைக்கிறார்கள்.  கடவுள்  கோபித்துக் கொள்ள போகிறாரா என்ன?  கடவுள் நீதியுள்ளவர்.  இருவருக்குமே பிரார்த்தனைகள் நடக்கின்றன. இவருக்கு அவரும் அவருக்கு இவரும் கடவுளிடம்  தங்களது வேண்டுதலை வைக்கின்றனர்.  கடவுள் வேண்டுதலைக் கட்டாயம் கேட்கத்தான் செய்வார்.  இந்த நிலையில் யாரையும் தண்டிக்கமாட்டார்! தண்டிக்காதவர் தான் கடவுள்! தண்டித்தால் அது என்ன கடவுள்?  வேண்டுதல்களைக் கேட்பவர் தானே கடவுள்!

அதனால் மலேசிய பெருமக்களே!  இப்போது நம்மிடையே கடவுள் எப்படி? என்பதில் பிரச்சனை இல்லை.  அவர் எந்த தலையீடும் செய்யப் போவதில்லை!  கொடுப்பவன் தான் பெரிய குற்றவாளி என்றால் வாங்குபவன்  குற்றவாளியே அல்ல!  வாங்குபவன் பதவியில் இருக்கிறான். அவன் தான் அரசாங்கம். அவனுக்கு ஆதரவாக இருப்பது  குடிகளின் கடமை என்று தான் சமயம் சொல்லுகிறது?

ஊழல் பெருச்சாளிகளுக்குக் கடவுள்  கடைசி காலத்தில் கையில்  ஊன்றுகோலை  ஒன்றைக் கொடுத்து இங்கும் அங்கும் அலைய விடுவார்!

No comments:

Post a Comment