Tuesday 10 September 2024

வாழ்க! வெல்க!

                  India-Gate    உணவகத்தின் 10-வது கிளையின் திறப்பு விழா 

அனைவருடன் சேர்ந்து நாமும் வாழ்த்துகிறோம்.  இன்னும் பல தொழில் அதிபர்கள்  தொடர்ந்து உணவகங்கள் திறக்க வேண்டும். திறம்பட நடத்த வேண்டும்.  தொழில் தொடங்க விரும்புவர்களும், அனுபவம் நிறைந்தவர்கள், வசதி வாய்ப்பு உள்ளவர்கள்  எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம்.  யாரும் வேண்டாம் என்று சொல்லப் போவதில்லை.

நம்முடைய ஆதங்கம் எல்லாம்   புதியவர்கள் பலர் தொழில்களுக்கு வரவேண்டும்.  அரசாங்கத்தை நம்பி வராதீர்கள். உங்களை நம்புங்கள்.  நம் சகோதர மலேசியர்களை நம்புங்கள். வெளி நாடுகளிலிருந்து இங்கு வந்து பலர் தொழில் செய்கின்றனர்.  நம்மால் முடியாது என்று சொல்லுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.

ஆனால் தமிழ் நாட்டவர்களை வேலைக்கு அமர்த்துகிறீர்கள்.  அவர்களுடைய சம்பளத்தில் கைவைக்காதீர்கள் அவர்களைக் கொடுமைப் படுத்தாதீர்கள்.  ஒருவனை அடித்து, ஏமாற்றி, கொடுமைப்படுத்தி அவனை வேலை வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் தொழில் செய்ய இலாயக்கில்லை. சிறைக்கதவுகள்  உங்களுக்காகக் காத்துக்கிடக்கிறது  என்பதை மறந்து விடாதீர்கள்.

தொழில் செய்வது என்பதற்கு அதிர்ஷ்டம் வேண்டும் என்று சொல்லுவதை எல்லாம் நம்பாதீர்கள்.உங்கள் உழைப்பை நம்புங்கள். நம்பகரமான  வேலையாட்களை வைத்துக் கொள்ளுங்கள். கணக்குவழக்குகளுக்குத் தனியாக ஒரு ஆளை அமர்த்திக் கொள்ளுங்கள்.  இது அவசியம்.  நீங்கள் வளருகிறீர்களா கீழ் நோக்கி இறங்குகிறீர்களா என்பதை உங்கள் கணக்குவழக்குகள் காட்டும். 

நம்மில் பலர் கணக்குவழக்குகளில் ஆர்வம் காட்டுவதில்லை.  எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது என்று அப்பன்காலத்துக் கதையையே பேசிக் கொண்டிருக்காதீர்கள்.  கணக்குவழக்குகள் தான் நமது நிலையைக் காட்டும் கண்ணாடி.

நம் இந்தியர்கள் இன்னும் நிறைய தொழில்களைத் திறக்க வேண்டும். தொழில் அதிபராக மாற வேண்டும்.  நாம் ஒரு வியாபார சமூகம் என்று பெயர் எடுக்க வேண்டும்.  நமது நிலை உயர வேண்டும்.  நம் தமிழ் முஸ்லிம்கள், தமிழ் செட்டியார்கள் - இவர்களைப் போன்று  நாமும் வியாபார சமூகமாக மாற வேண்டும்.

தொழிலில் ஈடுபடும் அனைவரையும் வாழ்த்துகிறோம்!

No comments:

Post a Comment