Friday 6 September 2024

இலக்கில் தெளிவில்லையோ!

 

இந்தியர் உருமாற்றுத்திட்டத்தில் முதன்மையான அமைப்பு என்றால் அது மித்ரா வைத்தவிர வேறு எந்த அமைப்பும் இல்லை.

அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சியே முக்கிய நோக்கமாகக் கூறப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அரசியல்வாதிகளே  மித்ராவின் மூலம் அதிகப்பயன் பெற்றதாகத் தகவல்கள் கூறின.  சரி, ஏதோ சில அரசியல்வாதிகளாவது பயன்பெற்றார்களே என்று நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியது தான்!

இப்போது அது பற்றி பேசுவதை விடுத்து  மித்ராவின் இன்றைய நிலை என்ன  என்பது தான் முக்கியம். மித்ரா இப்போது சிறு வர்த்தகர்களுக்கு எந்த வகையிலும் உதவும்  என்கிற நம்பிக்கையில்லை.  அவர்களின் நோக்கமே மொத்தமாக பணத்தை விநியோகம் செய்வதற்கு எளிதான வழியைத்தான் தேடுகிறார்கள்!

சிறு வர்த்தகர்களுக்கான உதவி கரம் நீட்ட  பல ஆண்டுகளாக 'தெக்கூன்' செயல்பட்டு வருகிறது. அது இப்போது டத்தோ ரமணன் வருகைக்குப் பின்னர் இந்தியர்கள் பலர் பயன்பெற்று வருகின்றனர்.  டத்தோ வருகைக்கு முன்னர் தெக்கூன் ஏதோ 'நமக்கு எதிரி' என்று தான் பார்க்கப்பட்டது. அவர்கள் நிறையவே உதவுகிறார்கள்.  இப்போது மித்ரா நமக்கு எதிரி போன்று செயல்படுகிறார்கள்!  இவர்கள் களத்தில் இறங்கி  செயல்படத் தயாராக இல்லை.  அவர்களுடைய விண்ணப்ப பாரங்களைக் கூட  எளிமைப்படுத்த தயாராக இல்லை!

மித்ரா தனது இலக்கை மாற்றிக் கொண்டதோ என்று தான் நாம் நம்ப வேண்டியுள்ளது. இனி அவர்களுடைய கடனுதவி என்கிற  இலக்கு இல்லையென்றே தோன்றுகிறது. ஏதோ ஒரு நிகழ்ச்சி நடத்தி  அதற்கான செலவை மொத்தமாக அப்படியே ஏற்றுக் கொள்வது இன்னும் வேலை பளுவைக் குறைக்கும்.   நாம் இவர்களைக் கேள்வி கேட்க முடியாது. அதிகாரம் அவர்களிடம் உள்ளது.  நமது கேள்விகளுக்கு இவர்கள் பதில் கொடுக்கத் தயாரில்லை!

வழக்கம் போல் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

No comments:

Post a Comment