Tuesday 6 June 2023

அபராதம் கட்டுவீர்!


 வாகனம் நிறுத்துமிடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதா  போடு அபராதம்!

யாருக்கு என்பது தான் முக்கியம்.  காவல்துறையைச் சேர்ந்தவரே அப்படி ஒரு தவற்றினைச் செய்தால்? வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி?

அதுவோ மாற்றுத்திறனாளிகளுக்கான கார் நிறுத்துமிடம். அந்த இடத்தில்  மோட்டார் சைக்கிளை நிறுத்துவது என்பது தவறு. அதுவும் கார் கதவருகே ஒட்டி நிறுத்துவது இன்னும் தவறு.  அந்த மாற்றுத்திறனாளி அந்தக் காரை  எடுப்பதென்றால் அல்லது நிறுத்துவதென்றால் அவர் என்ன செய்வார்?

அதிகாரத்தில் உள்ளவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். அவர் தான் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர  இது போன்று அசட்டுத்தனமாகவும் பொறுப்பற்றத் தனமாகவும் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.

இன்று நமது அரசாங்க அதிகாரிகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கின்றனர். அவர்களே சட்டங்களை மதிப்பதில்லை. பின்னர் யார் மதிப்பார்?   அதிகாரிகளின் கார்கள் சாலைகளின் சமிக்ஞைகளை மதிப்பதில்லை.  ஆனால் சராசரி மனிதர்களுக்குத் தான் அந்த சாலை விதிகள், சமிக்ஞைகள் என்றால் விதிகள் அதன் மதிப்பை இழந்துவிடுகின்றன.

அதிகாரிகள், அமைச்சர்கள், அவர்கள் வீட்டுப்பிள்ளைகள், அவர்கள் மனைவிகள்  -  இவர்கள் தான் பெரும்பாலும் சட்டத்தை மதிக்காதவர்கள். சட்டத்தை அமலாக்க வேண்டியவர்களே  சட்டத்தை அலட்சி8யப் படுத்தினால் சட்டத்தைப் போட்டு மிதித்தால்  அப்புறம் சட்டத்தை மதிப்பவர் யார்?

பொது மக்களுக்கு இது போன்று சட்டத்தை மதிக்காதவர்கள் தான் கண்முன் தெரிகின்றனர். இளைஞர்களோ சொல்ல வேண்டியதே இல்லை. அவர்கள் தவறானவர்களைத்தான் முன்னுதாரணமாகக் கொள்கின்றனர்.

எல்லாவற்றையும்விட அந்த  மோட்டார் சைக்கிளை அங்கிருந்து நகரவிடாமல்  சக்கரத்தில் இறுக்கியைப் போட்டுவிட்டுப் போனாரே  காவலர் அவர் தான் பாராட்டுக்குரியவர்.

சட்டத்தை  மேலிருந்து கீழ்வரை - அதிகாரிகளிலிருந்து அன்னக்காவடி வரை - கடைப்பிடித்தால் நாட்டு நலனுக்கு நல்லது!  எதிர்காலத்திற்கும் நல்லது!  மலேசியாவும் வாழும்!

No comments:

Post a Comment