Friday 23 June 2023

சிங்கப்பூர் கொடுத்த தண்டனை!

 


நமது அண்டை நாடான சிங்கப்பூர் பல வழிகளில் உயர்ந்து நிற்கிறது என்றால் அவர்களிடம் ஓர் ஒழுங்கு முறை இருப்பது தான் காரணம்.

நம்மால் அப்படியெல்லாம் இருக்க  முடியாது. நாம் ஒழுங்குமுறைக்கு அப்பாற்பட்டவர்கள்! நாம் மலேசியர்கள் என்பதைவிட  மலாய்க்காரர், சீனர், இந்தியர் - என்று இந்த பாணியிலேயே பார்ப்பது நமது இயல்பாகிவிட்டது.

நமது மலேசியர் ஒருவரின் கார் சிங்கப்பூர் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சொல்லப் போனால் இது ஒரு சாதாரண விஷயம் தான்.  ஆனால் நமக்குத் தான் தலைக்கனம் கொஞ்சம் கூடுதலாயிற்றே! அதனால் இந்த தண்டனை!

காரின் ஓட்டுநர் காத்திருப்பதற்கு நேரமில்லை. வரிசையில் ஏகப்பட்ட கார்கள்.  இவரோ பேருந்துகள், லாரிகள் பயன்படுத்தும் பாதையைப் பயன்படுத்தி சீக்கிரமாகவே போய்ச் சேர்ந்துவிட்டார்., இடையே அவர் காவல்துறையால் தடுத்து நிறுத்தியது போது அவர் அதனைச் சட்டை செய்யவில்லை.

ஆனாலும் அவர் நினைத்தது போல ஒன்றும் நடக்கவில்லை. சிங்கப்பூருக்குள் அவரால் உள்ளே நுழைய முடியவில்லை!  அவசரம் என்றால் எல்லாருக்குமே அவசரம் தான்.  அவருக்கு மட்டும் தானா அவசரம்?

இவரைப்  போன்ற அவசரக்குடுக்கைகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்படியே குறுக்கே, நெடுக்கே, இப்படி வெட்டி, அப்படி வெட்டி போவதால் தான்  எல்லாருக்குமே அது இடைஞ்சலாக இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  இருக்கின்ற நிலைமையைப் புரிந்து கொண்டால், அதன்படி காரை செலுத்தினால் எந்த ஒரு தாமதமும் ஏற்படாது.  போக்குவரத்தும் சுமுகமாக இருக்கும்.

பொதுமக்களுக்குத் தேவை ஒரே சீரான, தரமான ஒரு வாழ்க்கை முறை.  இப்படி குறுக்கும் நெடுக்கும் போய் அந்த வாழ்க்கை முறையை மாற்ற நினைப்பது நல்லதல்ல. நல்லது நடக்க நாம் எதனையும் செய்யலாம். ஆனால் கெடுதல் நடக்க நாம் துணை போக முடியாது. அத்னால் தான் சரியான ஒழுங்குமுறை என்பது தேவைப்படுகிறது. சிங்கப்பூர் நல்லதொரு வாழ்க்கை முறையை நோக்கி நகர்கிறது.

குப்பைகளை யாரும் போடுவதில்லை.  ஆனால் நமது நாட்டில் அது இயல்பாகவே நடக்கிறது. சிங்கப்பூர் அதற்கான தண்டனையைக் கொடுக்கிறது.  நம்மால் கொடுக்க முடியவில்லை.  அதற்கும் ஓர் அரசியல் வந்து விடும். அதனால் பயப்பட வேண்டியுள்ளது

எப்படியோ  சம்பந்தப்பட்ட மலேசியருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை வரவேற்கக் கூடியதே! ஆனாலும் போதாது!

No comments:

Post a Comment