Monday 26 June 2023

தேசிய கல்வி மன்றத்தின் உறுப்பினர்!!

 

       நன்றி: வணக்கம் மலேசியா

தேசிய கல்வி மன்றத்தின் உறுப்பினராக சுப்பிரமணியன் கண்ணன்  நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய தகுதிகளைப் பற்றி நாம் பேச நமக்கு எந்த தகுதியும் இல்லை. காலம் தாழ்த்தினாலும் சரியானதொரு  தேர்வையே  கல்வி அமைச்சு செய்திருக்கின்றது.

ஆனால் கல்வி அமைச்சு காலம் தாழ்த்தி இந்த நியமனத்தைக் கொண்டுவந்திருப்பதில் நமக்கு எந்த மகிழ்ச்சியில் இல்லை.  எப்போதோ செய்திருக்க வேண்டும்.  கல்வி அமைச்சில் தகுதியற்றவர்கள்  அதிகமானோர் கூடிக்கொண்டே போகின்றனர் என்றே தோன்றுகிறது! ஒரு நியமனத்திற்கு இத்தனை மாதங்களா?

இன்னொன்றையும் நாம் சொல்லத்தான் வேண்டி உள்ளது. தமிழ்ப்பள்ளிகள் சம்பந்தமாக எதுவாக இருந்தாலும் அதற்கான தீர்வு உடனடியாகக் கிடைப்பதில்லை. நிறைய தடவை காவடிகளுக்கு மேல் காவடிகள் கல்வி அமைச்சுக்கு எடுக்க வேண்டியுள்ளது என்பது எந்த வகையிலும் பாராட்டாக் கூடிய செயல் அல்ல.  

அமைச்சரவையில் பேசுவது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அமைச்சரைச் சென்று பார்ப்பது,  மக்கள் ஊடகங்களில் குரல் கொடுப்பது, அதனை அரசியல் ஆக்கி   குழப்புவது - இப்படி என்னன்னவோ  தமிழ்ப்பள்ளிகளுக்காக  இந்நாட்டில் உள்ள நமது மக்கள் போராட வேண்டியுள்ளது!

இதில் என்ன வருத்தம் என்றால்  ஏற்கனவே தேசிய முன்னணி  ஆட்சியில் இதையே தான் நாம் செய்து வந்தோம். அதையே தான் இப்போதும் செய்கிறோம்!  கல்வி அமைச்சில் அதே அதிகாரிகள் தான்  இப்போதும் இருக்கின்றனர். அவர்கள் அப்படியே தான் இருக்கின்றனர். அவர்கள் மாறவில்லை. அதிகாரிகள் தான் நமக்கு முட்டுக்கட்டை.  அது இப்போது தான் உடைபடுகிறது. ஆனால் அது இரும்பு கோட்டை. அவ்வளவு எளிதில் அசைந்து கொடுக்காது.  

தேசிய முன்னணி காலத்தில் இருந்த நடைமுறையை நாம் இனி பின்பற்ற முடியாது. அப்போது ம.இ.கா. செய்த தவறுகள் இப்போதும் நடக்கின்றது என்றால் அதை நாம் நிச்சயமாக எதிர்ப்போம்.  நமது உரிமைகளுக்காக எல்லாகாலங்களிலும் நாம் போராடிக்கொண்டே இருக்க முடியாது.

இப்போது தமிழ்ப்பள்ளிகளுக்கான மன்றத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் திரு.சுப்பிரமணியம் அவர்களை நாம் மனதார வாழ்த்துகிறோம். ஐயா! இந்த சமுதாயம் உங்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறது.  குறைகள் நிறைய வரும். எல்லாவற்றையும் கடந்து தான் நல்லதைச் செய்ய முடியும்.  இந்த சமுதாயத்தைப் புரிந்தவர் நீர்.  சொல்ல ஒன்றுமில்லை. 

புரிந்து கொண்டு செயல்பட்டால் போதும்!

No comments:

Post a Comment