Monday 19 June 2023

மின்சிகிரெட்டுகள் தடையா?

 


புகைபிடிப்பது உடல்நலனுக்குக் கேடு என்று சிறிய எழுத்துக்களில் தமிழ் திரைப்படங்கள் தொடங்குவதற்கு முன்பே போட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.  அதன் பொருள்  "நீ புகைபிடித்து நாசாமாய்ப் போ!" என்பது தான். நீங்கள்  வேறு விதமாய் அர்த்தப்படுத்திக் கொண்டால் அது அவர்களது பிழை அல்ல!   மது  அருந்தினாலும் பொருள் என்னவோ அதுவே தான்!

சிகிரெட் என்றால் உடல்நலனுக்குக் கேடு என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் அதனை நிறுத்த முடியவில்லை. எத்தனையோ ஆண்டுகளாக  சிகிரெட்டின் தீமையைப் பற்றி  சொல்லாதவர்கள், பேசாதவர்கள் யாருமில்லை. அதில் எத்தனையோ டாக்டர்களும் அடங்குவர். டாக்டர்கள் நோயாளிகளிடம் அறிவுரைக் கூறிவிட்டு அடுத்த நிமிடமே புகைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்! சிகிரெட் பிடிப்பவர்களின் பெரிய பலவீனமே டாக்டர்கள் தான்!  யார் பிடித்தாலும் பலன் என்னவோ ஒன்று தான்.  அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  டாக்டர்களுகென்று தனிப்பட்ட விதிமுறைகள் எதுவும் கிடையாது. சிகிரெட்டைப் பொறுத்தவரை டாக்டர்களும் நோயாளிகள்  ஒன்று தான்!

ஆனால் இன்றைய நிலையில் மின்சிகிரெட்டுகளின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. மின்சிகிரெட்டுகள் சாதாரண சிகிரெட்டுகளைவிட  மிகவும் அபாயகரமானவை என்பதாகக்  கூறப்படுகிறது.  

ஆனால் ஏனோ தெரியவில்லை. இஸ்லாமிய தேசிய Fatwa மன்றம்  மின்சிகிரெட்டுகளைப் புகைப்பதைத் தடை செய்திருக்கின்றது. அது ஒரு இஸ்லாமிய மன்றம் என்பதால் இஸ்லாமியர்களுக்கு மட்டும் அந்தத் தடை  உத்தரவைப் பிறப்பத்திருக்கின்றது. அதன் பின்னணி என்ன என்பது நமக்குத் தெரியவில்லை. அந்த மின்சிகிரெட்டுகளில் என்ன கலப்படங்கள் செய்யப்படுகின்றன என்பதும் நாம் அறியவில்லை. அல்லது வியாபாரிகளின் நலன் காக்கவா? தெரியவில்லை!

ஆனால் நமக்கு இது ஒரு மனக்குறை தான். இந்தத் தடை உத்தரவு என்பது மலேசியர்கள் அனைத்தவர்களுக்குமாக இருந்திருக்க வேண்டும். ஏற்கனவே எல்லாரின் கைகளிலும் ஒரு கொள்ளிவாய்ப் பிசாசை வைத்துக்கொண்டு அலைகிறோம்!  அது ஒன்றே போதும் நாட்டின் சுகாதாரத் துறையின் செலவுகளை அதிகரிக்க! இதில் வேறு ஏன் மீன்சிகிரெட்டுகள்?

நமது பரிந்துரை என்னவென்றால் இந்த மின்சிகிரெட்டுகள் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்.  யாருக்கும் வேண்டாம். சாதாரண சிகிரெட்டுகளே போதும்!  புதிது புதிதாக வியாதிகள் வேண்டாம்! ஏற்கனவே நம்மிடம் 'டன்'  கணக்கில்  வியாதிகள் உள்ளன! அதுவே போதும்! ஒரு வியாபாரி  பணம் பண்ண வேண்டும் என்பதற்காக    வியாதிகளை மடியில் போட்டுக்கொண்டு கொஞ்ச முடியாது!

No comments:

Post a Comment