Friday 30 June 2023

அரிசி விலை எகிறுமா?

 

விலையேற்றம்  என்பது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.

ஆனால் அரிசி விலை ஏறும் போது தான் அடிவயிற்றைக் கலக்குகிறது! மலேசியர்களின்  உணவே அரிசி உணவு தானே.

ஒரு விஷயம் மனதுக்கு ஆறுதல். மலேசியாவில் உற்பத்தியாகும்  அரிசி விலையில்  எந்த மாற்றமும் ஏற்படாது.  அரிசியின் உற்பத்தியில்  எந்த மாற்றமும் இல்லை. உற்பத்தி வழக்கம் போல இருக்கிறது.  சந்தையில் தாராளமாகக் கிடைக்கிறது.  அதன் விலை வழக்கம் போல ரி.ம. 2,60 காசுகள்.  அதன் விலையை வியாபாரிகள்  ஏற்றினால் அதனை நீங்கள் புகார் செய்யலாம்.

வெளிநாட்டு அரிசிகளைப் பயன்படுத்தவர்களின் நிலைதான் கொஞ்சம் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கும் அல்லது இருக்கலாம்.  அதன் உற்பத்தி நிலவரம் நாம் அறியவில்லை.  குறைவான உற்பத்தி என்றால் அதன் விலையை அந்த அந்த நாடுகள் ஏற்றிவிட்டால் நம்மால் ஒன்று செய்ய இயலாது.

இந்தியர்களில் பலர் புழுங்கல் அரிசி உணவைச் சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். அதன் விலையேற்றம் ஒரு வெள்ளியிலிருந்து இரண்டு வெள்ளி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக எல்லா வெளிநாட்டு உற்பத்திகளும் விலை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. சிக்கனம் என்று நினைத்தால் நமது நாட்டு உற்பத்தியைத்தான்  தேர்ந்தெடுக்க வேண்டும்.`    

ஆனால் வேறு வழியில்லை. அதிக விலை போட்டு விலையுள்ள அரிசிகளை எல்லாராலும் வாங்க இயலாது. விரலுக்கேற்ற வீக்கம் என்பதுபோல நம்மால் எதனைத் தாக்குப்பிடிக்க முடியுமோ அந்த பக்கம் மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். 

பெரும்பாலும் மலாய்க்காரர்கள் உள்ளூர் அரிசியைத்தான்  பயன்படுத்துகின்றனர்.  அது அவர்களுக்குப் பழகிவிட்டது. நமக்குத் தேவை என்றால் நாமும் பழகிக்கொள்ள வேண்டியது தான்.  எது விலை குறைவோ அந்தப்பக்கம் சாய்ந்து விடுவது தான் நல்லது.  எல்லாமே பழக்க தோஷம் தான். பழகிவிடும்.

 அரிசி விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது.  இன்னும் ஓரிரு மாதங்களில் அதன் தாக்கம் தெரியும். விலை ஏறக்கூடாது என்பது தான் நமது எதிர்பார்ப்பு. இப்போது எதனையும் நம்மால் கணிக்க முடியவில்லை. எல்லாமே தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது! விலை ஏறலாம் அல்லது ஏறாமலும் போகலாம்! பொறுத்திருப்போம்!

No comments:

Post a Comment