Friday 9 June 2023

இது எப்படி சரியாகும்?

 

                        UMNO YOUTH CHIEF:  Dr.Muhammed Akmal Saleh

அம்னோ இளைஞர் பிரிவு  அம்னோ ஒரு தூய்மையான கட்சி என்பதை நிருபிக்க  ஜனநாயக செயல் கட்சி, தேர்தலுக்கு முன்பு வசைபாடியதை இப்போது வாபஸ் வாங்க வேண்டும் என்றும் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் வலியுறுத்திருக்கிறது!

இது ஒரு ஆச்சரியமான விஷயம் என்பதில் எந்த கருத்து வேறு பாடும் இல்லை. இளைஞர் பிரிவின் தலைவர்  டாக்டர் அக்மால்  இப்படி கூறியிருப்பதைப் பார்த்து நம்மால் நகைக்கத்தான் முடிகிறது! என்ன சொல்ல?

அம்னோ ஒரு தூய்மையான கட்சியா என்பதை இளைஞர் பிரிவு கொஞ்சம் மனதில் கை வைத்துச் சொல்ல  வேண்டும். அவர்களுக்கு மக்களிடையே உள்ள மரியாதை என்ன என்பது அவர்களுக்கே தெரியும். மறைப்பதற்கு ஒன்றுமில்லை.  அரசியலில் அவர்களைப் போல் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள்  இந்நாட்டு சரித்திரத்தில் யாரும் இல்லை.

"கொள்ளையடித்தாலும் மலாய்க்காரர்கள் எங்களைத்தான் ஆதரிப்பார்கள்"  என்கிற தைரியம் அவர்களுக்கு உண்டு.  அல்லது ஆதரிப்பது அவர்களது கடமை என்று அம்னோ நினைக்கிறதா? நமக்குத்தான் தலை சுற்றுகிறது!

சென்ற பொதுத் தேர்தலில் அவர்கள் தோற்றதின் முக்கிய  காரணமே  இலஞ்சம், ஊழல் என்பதால் தான். அதனை மறுப்பதற்கோ அல்லது மறைப்பதற்கோ அவர்களால் இயலாது.

இன்று இலஞ்ச ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள்  பலர் ஒற்றுமை அரசாங்கதில் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.  ஏன் துணைப்பிரதமர் வரை பதவி வகிக்கிறார்கள்! உண்மை தான். அதற்காக மக்கள் அவர்களின் இலஞ்ச ஊழலை மறந்துவிட்டார்கள் என்பதல்ல. அல்லது ஒற்றுமை அரசாங்கத்தில் அவர்களின் ஊழல்கள் மறைக்கப்பட்டன என்பதல்ல. அவர்கள் இன்னும் ஊழல் கூற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கித்தான் இருக்கிறார்கள்.

இப்படி ஊழலையே தொழிலாகக் கொண்டவர்களை  யாரும் மறக்கவில்லை.  இவர்களையும் ஆட்சியில் இணைத்துக்கொள்ள ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஒரு தேவை ஏற்பட்டது. அதுவும் மாமன்னரின்  சிபாரிசின் பேரில். 

ஆனால் அம்னோ அத்தனையும் மறந்துவிட்டு, இவர்களின் ஊழல்களை மறந்துவிட்டு "நீ மன்னிப்புக் கேள்!' என்று பேச ஆரம்பித்திருப்பது இவர்களின் முட்டாள் தனத்திற்கு எல்லையே இல்லை என்று அனைவரையும்  வியப்படையச் செய்கிறது!

இப்போது அம்னோவை வழிநடத்துபவர்கள்  படித்தவர்கள். முன்பு தொண்டு செய்ய வந்தவர்கள். அவர்களை மறந்துவிட்டார்கள்.  கல்வியால் யாரும் பயன் பெறவில்லை. இலஞ்சம், ஊழல் பெருவதற்குத்தான் பயன் பெறுகிறார்கள்! இவர்கள் திருந்துவதற்கு வழியில்லை என்று தான் தோன்றுகிறது!

No comments:

Post a Comment