Thursday 22 June 2023

அதிக வயதான ரப்பர் மரம்!

 

                     நம் நாட்டில் மிகவும் வயதான ரப்பர் மரம்!

மலேசியாவில் முதன் முதலாக நடப்பட்ட ரப்பர் மரம் தான் நீங்கள் மேலே பார்ப்பது. அதன் வயது 140 க்கு மேல் இருக்கும்  என்று  சொல்லப்படுகிறது. அந்த மரத்தின் விலை தற்போது  ரி.ம.200,000 என மதிப்பிடப்படுகிறது.

இப்போது பேராக், கோலகங்சார், நகராண்மை கழக. ஊராட்சி மன்றத்தின் பாதுகாப்பில் இருக்கும் இந்த மரம் பாரம்பரிய மரங்கள் பட்டியலிலும்  சேர்க்கப்பட்டு உள்ளது.

1877 - ம் ஆண்டுகளில் வெள்ளளைக்காரர்களால் சுமார் 22 ரப்பர் கன்றுகள் 
இந்நாட்டிற்குக்குள் கொண்டு வந்த வேளை அதில் ஒன்பது கன்றுகள் கோலகங்சாரில் நடவு செய்யப்பட்டு  இப்போது அதில் ஒன்று  பெரும் மரமாகி  140 ஆண்டுகளைத் தாண்டி நிற்கின்றது!

பெரும்பாலான மலேசிய இந்தியர்கள் ரப்பர் மரங்களோடு தான் வாழந்து,  வளர்ந்தவர்கள்.  அதனால் நாம் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. நம்மிடம் சில திறன்கள் இருந்தன  அதனை வெள்ளையன் பயன்படுத்திக் கொண்டான்! அவ்வளவு தான்!

இதைவிட வயதான மரங்கள் எல்லாம் நம் நாட்டிலேயே உள்ளன. ஆனால் ரப்பர் மரம் என்பது நமக்கு மிகவும் விசேஷமானது. ஒரு காலகட்டத்தில் இந்த மண்ணெய் "பொன் விளையும் பூமி" என்றார்கள். அதில் சந்தேகம் இல்லை.  இந்த ரப்பர் மரங்கள் தான் பொன்னை விளைவித்துக் கொண்டிருந்தன.  அந்த விளைச்சல் எப்போது குறைந்து போனதோ அன்றே இந்தியர்கள் வாழ்க்கையும்  கறைந்து போனது. 

மேலே குறிப்பிட்ட இந்த மரம் தனது கடைசி காலத்தை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அதனைப் பராமரிக்கும் செலவு ரி.ம.5000/ - ஆவதாக சொல்லப்படுகிறது. வயது மூப்பின் காரணமாக  மரம் போதுமான எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்கவில்லை. அதனால் இப்போது உரம், ரசாயனங்களைப் பயன்படுத்தி தான் அதன் வாழ்க்கை நீட்டிக்கப்படுகின்றது.

எப்படியோ நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி  இன்னும்  பல ஆண்டுகள் இதன் ஆயுளை   நீட்டிக்க  வேண்டும் என்பதே நமது ஆசை. நம்மை, நமது இனத்தை வாழ வைத்த மரம் அல்லவா!

No comments:

Post a Comment