Friday 15 April 2022

நான்காவது தடுப்பூசியா?

 

கோவிட்-19 தொற்று இருக்கும்வரை தடுப்பூசி போடுவதிலும் அவ்வப்போது சில மாற்றங்கள்  வரத்தான் செய்யும்.

உலகளவில் என்னன்ன மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றனவோ அந்த மாற்றங்கள் நம் நாட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கும். கோவிட்-19 உடனடியாக நம்மிடையே இருந்து போகும் சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

இதனைடையே நான்காவது தடுப்பூசி போட வேண்டும் என்கிற ஆலோசனையைச் சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது. இளைய சமுதாயத்தினர் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நோய் தடுப்பு என்பதைத்தவிர பயப்பட ஒன்றுமில்லை.

நான்காவது தடுப்பூசி என்பது அறுபது வயது மேற்பட்டவர்களுக்குத்தான் என்பதாக சுகாதாரா அமைச்சு கூறுகிறது. அதுவும் அவர்கள் விரும்பினால் மட்டுமே!  எந்த வற்புறுத்தலும் இல்லை!

அறுபது வயதுக்கு மேற்பட்டோர் என்னும் போது உடல் திடகாத்திரமாக உள்ளவர்களுக்கு இது தேவையுமில்லை; சிபாரிசு செய்யப்படவும் இல்லை. ஆனால் இந்த வயதுக்கு மேற்பட்டோர் பல்வேறு வியாதிகளினால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் இந்த நான்காவது தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது  என்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மூன்றாவது தடுப்பூசி போட்டவர்களின்  இறப்பு விகிதம் குறைவு என்பதில் ஐயமில்லை.  குறைவான மரண எண்ணிக்கை என்றாலும் அவர்கள் பெரும்பாலும் கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள்.   கோவிட்-19 தொற்று என்பது, கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றால், அந்த மருந்தின் வீரியம் என்பது நீண்ட நாட்களுக்குத் தாக்குப்பிடிப்பதில்லை. சீக்கிரமே அதன் வீரியம் குறைந்துவிடும். அதனால் நான்காவது தடுப்பூசி என்பது  ஒரு சிலருக்குத் தேவை என்பதாகிறது. குறிப்பாக  கொடிய நோய்களின் அதிகத்  தாக்குதலுக்கு உள்ளாகியவர்களுக்கு தேவையே.

பல நாடுகள் இப்போது நான்காவது தடுப்பூசியை அறுபது வயதினருக்கு மேற்பட்டோருக்குப் போட ஆரம்பித்துவிட்டன. ஆஸ்தரேலியா, சுவீடன், தென் கொரியா, இஸ்ரேல், டென்மார்க்  பிரிட்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகள் தங்களது மூத்த பிரஜைகளுக்குப் போட ஆரம்பித்துவிட்டன.

நமது நாடும் இப்போது இந்த வேலையில் இறங்கியிருக்கிறது. ஆனால் கட்டாயப்படுத்தவில்லை.  இன்றைய நிலையில் இனிப்பு நீர், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இல்லாதவர்கள் இல்லை என்கிற நிலையாகிவிட்டது.

நான்காவது பூஸ்டர் தடுப்பூசி அறுபது வயது மேற்பட்டோருக்குத் தேவையே என்பதே நமது கருத்து!

No comments:

Post a Comment