Saturday 30 April 2022

மகளிர் மேம்பாட்டுக்கு மட்டுமா?

 

                                            மித்ரா: இந்த ஆண்டு மகளிர் மட்டும்?

பொதுவாகவே நமக்கு ம.இ.கா. வின் மேல் ஒரு வெறுப்பு உண்டு. அவர்கள் இந்தியர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்கள் என்கிற அபிப்பிராயம் அவர்கள் மீது நமக்குண்டு.

இதனை நாம் இப்போது தான் சொல்லுகிறோம் என்பதல்ல. அது அன்றைய தலைவர் சாமிவேலு காலத்திலேயே உருவாகிவிட்ட ஓர் அபிப்பிராயம்! ஆனால் அது இன்னும் தொடர்கிறதே என்பது தான் நமது குற்றச்சாட்டு!

ஆனாலும் இதையெல்லாம் அவர்கள் கண்டுக்கப் போவதில்லை. நல்ல காலத்திலேயே இல்லை.  தேர்தல் காலத்திலா கண்டுக்கப் போகிறார்கள்!

எது எப்படியோ சமீபத்தில் படித்த ஒரு செய்தி. இந்த ஆண்டு,  இந்தியர்கள்  வர்த்தகத்தில் உயர  உருவாக்கப்பட்ட மித்ரா,  பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் போகிறதாம். நல்லது. இத்தனை ஆண்டுகள் செடிக், மித்ரா இரண்டு அமைப்புகளும் அள்ளி அள்ளிக் கொடுத்ததில் ஆண்கள் உயர்ந்து விட்டர்கள் என்பது அவர்களது புரிதலாக இருக்கலாம்.

நிதியைக் கொடுக்கிறவர்கள் குளிர்சாதனை அறைகளிலிருந்து சிந்திக்கிறார்கள். வாங்கும் நிலையில் உள்ளவன் மின்விசிறி அறையிலிலிருந்து சிந்திக்கிறான். இரண்டு பக்கமும் சிந்திக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் கொடுப்பவன் தான் வெற்றி பெறுகிறான். அவனிடம் தான் அதிகாரம் உண்டு. நாம் எல்லாகாலங்களிலும் வெறும் பூஜயம் தான். அவன் கொடுக்கப் போவதுமில்லை1  நாம் வாங்கப் போவதுமில்லை!

பெண்களுக்குக் கொடுப்பதில் ஒரு  சௌகரியம் உண்டு  என அவர்கள் நினைத்திருக்கலாம்.  காரணம் நம் பெண்கள் சிறுசிறு வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்கள். ஆயிரம், இரண்டாயிரம் என்று கொடுத்தால் போதும் அவர்கள் திருப்தியடைந்து விடுவார்கள்.  ஆண்கள் என்றால் அதிகமான நிதி கொடுக்க வேண்டி வரலாம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இப்போது நமக்கு ஒரு சந்தேகம் வரத்தான் செய்கிறது. இந்த செடிக்காக இருந்தாலும் சரி  அல்லது மித்ராவாக இருந்தாலும் சரி , இந்த அமைப்புகளை உருவாக்க அரசாங்கம் என்னதான் நோக்கம் கொண்டிருந்தது? ம.இ.கா. தலைவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காகவா அல்லது இந்தியர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காகவா?

மகளிர் முன்னேற்றத்திற்கென  அரசாங்கம் பல்வேறு அமைப்புகளை வைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  அவர்களுக்கு அந்த வழிகாட்டல் இருந்தாலே போதும் மித்ராவிலிருந்து எந்த வழிகாட்டுதல்களும் தேவை இல்லை.  பாவம்! வலுக்கட்டாயமாக அவர்களை இதற்குள் இழுத்து வேடிக்கை காட்டுகிறார்கள்!

என்ன தான் நடக்கிறது பார்ப்போம்!

No comments:

Post a Comment