Wednesday 6 April 2022

எதிர்காலம் இனி இல்லை!

 

                                                    Ex PM Tan Sri Muhyiddin Yassin

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் அவரது கட்சியான பெரிக்காத்தான் நேஷனல்  கடந்த ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை!

ஜொகூர் மாநில  அரசியலில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதராக வலம் வந்தவர் முகைதீன். அது ஒரு காலம் என்று சொல்கின்ற நிலைமைக்கு  இன்று வந்து விட்டார் அவர்.

எல்லாம் அவர் செய்த தவறுகள். செய்த தவறுகள் இப்போது அவரைப் பழிவாங்குகின்றன!  பக்காத்தான் அரசாங்கத்தை அவர் நிம்மதியாக தனது கடமைகளைச் செய்ய விடவில்லை. தான் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக  அந்த அரசாங்கத்தை பின்வாசல் வழியாக கவிழ்த்தவர்! இது அனைவருக்கும் தெரிந்த கதை தான்.

ஏன் அவர் பக்காத்தான் அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்த போது கூட தனது துரோகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தியர்களை அவர் ஒதுக்கித் தள்ளியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.  

ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்.  இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனையில் அவர் எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதாக முகைதீன் மீது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆத்திரமாகக் கூட இருக்கலாம்.

சென்ற 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் கட்சி  ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனைத் தீர்க்கப்படும் என்பதாக அவர்களின் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தனர். முகைதீன் தனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது என்று சொல்ல முடியாது. அதை அவர் அறிந்தவர் தான். ஆனால் அவர் அதனை மறந்து போனார். பதவிக்கு வந்த பிறகு இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனையைத் தீர்க்கும் அதிகாரம்  அவருக்கு இருந்தும் அவர் அதனைச் செய்யவில்லை. சட்டை செய்யவில்லை. இந்தியர்களை ஒரு பொருட்டாக அவர் மதிக்கவில்லை.

அரசியலில்  இனி அவருக்கு இறங்கு முகம் என்பதில் ஐயமில்லை. புதிய கட்சியைத் தொடங்குவது எளிது. ஆனால் தொண்டர்களுக்கு எங்கே போவது?  பதவியில் இருக்கும் போது பத்தாயிரம் பேர் கூட வேலை செய்யத் தயாராய் இருப்பான்! பதவியில் இல்லாத போது பத்து பேர் கூட உதவிக்கு வரமாட்டான்! மேலும் அவருக்கு உடல் நலமும் சரியில்லாத நிலையில் இனி அவரிடமிருந்து பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதையும் தொண்டன் அறிவான்! தலைவனைப் போலத்தானே தொண்டனும்!

அரசியலுக்கு முழுக்குப் போட வேண்டிய நிலைமைக்கு முகைதீன் வந்துவிட்டார். வருகிற பொதுத் தேர்தலில் அவர் கட்சி வெற்றி பெறும் என்பதெல்லாம் வெறும் பகற்கனவு என்பது தான் உண்மை! இன்றைய நிலையில் அவருக்கு ஓய்வு தேவை. நாட்டு மக்களுக்காக உழைப்பேன் என்பதெல்லாம் இனி எடுபடாது! இனி உங்களை வரவேற்பார் யாருமில்லை!

உழைத்தது போதும்! ஓய்வு எடுங்கள் டான்ஸ்ரீ என்பதே நமது அறிவுரை

No comments:

Post a Comment