Wednesday 27 April 2022

முடிவுக்கு எப்போது வரும்?

 

இலங்கையை இப்போது துளைத்து எடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார சிக்கல்கள் எப்போது ஒரு முடிவுக்கு வரும்?

இப்போது தான் ஆரம்பம். அதற்குள் முடிவு பற்றி சொல்ல இயலாது! ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டங்கள் கூடிக்கொண்டே போகின்றன.. அது குறையும் என்கிற அறிகுறி எதுவும் தெரியவில்லை.

இந்த நிலையில் ராஜபக்சே என்ன சொல்ல வருகிறார்/   கோரோனா தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்றார். அதனால் தான் சுற்றுப்பயணிகளைக் கவர முடியவில்லை என்றார். அதனால் தேயிலை ஏற்றுமதி சாத்தியமில்லை என்கிற நிலை. ஆடை ஏற்றுமதி சரிந்து போனது என்பது இன்னொரு காரணம். 

ஆனால் இவர்கள் சொல்லுகின்ற காரணங்கள்  இலங்கைக்கு மட்டும் அல்ல. பல நாடுகளிலும் இதே  நிலை தான்.  இந்த நிலையிலும்  அனைத்து  நாடுகளும் ஏதோ கடவுள் புண்ணியத்தில் தப்பித்துக் கொண்டன. நூறு விழுக்காடு நிறைவு இல்லையென்றாலும்  ஐம்பது விழுக்காடு  பசி பட்டினி இல்லாமல் தப்பித்துக் கொண்டனர். அதில் நமது நாடும் ஒன்று.

இப்போது எதுவும் மக்களிடம் எடுபடவில்லை என்பதால் மீண்டும் விடுதலைப்புலிகள், தமிழர்கள் என்று பழைய புராணத்தைப் பேச  ஆரம்பித்துவிட்டார் ராஜபக்சே! புலிகளால் தான் இந்த நிலைமை என்கிறார். வெளிநாட்டுத் தமிழர்களால் தான் இந்த நிலைமை என்று பழி போடுகிறார்!

ஆனால் மக்கள் அவரைப் புரிந்து கொண்டனர். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த பதிமூன்று ஆண்டுகள் நாட்டின் நலனுக்கு நீங்கள் ஆற்றிய பங்கு என்ன என்று அவரைத் துளைத்து எடுக்க ஆரம்பித்துவிட்டனர்!

ஆனால் ராஜபக்சே,  தான் பதவியிலிருந்து விலகப் போவதில்லை  என்று பதவியை இறுகப்பிடித்துக் கொண்டிருக்கிறார்.  நமக்குத் தெரிந்த காரணம்: பதவி விலகினால் அடுத்த கணம் அவர் கைதுசெய்யப்பட்டு, குடும்பத்தோடு சிறையில் தள்ளப்படுவார். சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். நாட்டைவிட்டுத் தப்பிக்கலாம் என்றால் அவர் மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தில் அவரை 'உண்டு இல்லை!' என்று ஆக்கி விடுவார்கள்! அதனால் அவர் என்ன செய்வது என்று புரியாமல் பயந்து கிடக்கிறார்!

அவருக்குள்ள பயத்தினால் தான் பதவியைவிட்டு விலக மறுக்கிறார்!நாட்டைவிட்டு ஓடவும் வழியில்லாத ஒரு நிலையில் "நான் விலகமாட்டேன்! நான் விலகமாட்டேன்!" என்று கதறிக் கொண்டிருக்கிறார்!

ஏமாற்று அரசியல் செய்பவர்களுக்கு இவர் ஒரு நல்ல பாடம்!

No comments:

Post a Comment