Friday 29 April 2022

சீன சமூகத்தைப் பாராட்டுவோம்!

 

           Compared to Malays and Indians, Chinese have the best Covid-19 health practices.  

யார் என்ன தான் சொல்லுங்கள்.  ஒரு சில விஷயங்களில்  சீனர்களின் கட்டுக்கோப்பு நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது!

கோவிட்-19 தொற்று சம்பந்தமாக அரசாங்கம் சொன்ன கட்டுப்பாடுகளை மிகவும் கவனமாக அதனை ஏற்றுகொண்டு செயல்படுத்தியவர்கள் என்றால் அது சீனர்கள் தான்.

சுகாதார அமைச்சின் ஆய்வுகள்  அதனைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. ஏன் இந்த ஆய்வுகள் வரும் முன்னரே நாம் கண்ணாரப் பார்த்திருக்கிறோம். பொது இடங்களில் நாம் பார்த்தால் அவர்கள் மட்டும் தான் எப்போதும் அரசாங்கம் சொல்லுகின்ற அந்தக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தனர். முகக்கவசம் அணிவது, தூர இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற விஷயங்களில் அவர்களிடம் எந்த சமரசமும் இல்லை.  பெரும்பாலும் அதனை அவர்கள் மிகவும் கடுமையாகவே பின்பற்றினர். எந்த நிலையிலும் அவர்கள் அலட்சியம் காட்டியதில்லை!

இவர்களை அடுத்து இந்தியர்களும் பெரும்பாலும் கட்டுப்பாடுகளோடு தான் நடந்து கொண்டனர். தூர இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் கொஞ்ச அலட்சியம் உண்டு. மற்றபடி கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தனர்.

மலாய்க்காரர் பிரச்சனையே வேறு. அவர்கள் கோவிட்-19 தொற்றையே வெறுத்தனர்! அந்த வெறுப்பை வெளியேயும் காட்டினர். மற்றவர்கள் முன் இருமிக்கொண்டு மற்றவர்களைப் பயமுறுத்தினர்! அவர்கள் முன் நின்று பேசுவதே பயப்பட வேண்டியதாயிற்று! மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டு எதிரே இருப்பவர்களை பயமுறுத்தினர். இவர்களில் பெரும்பாலானோர்  வயதானவர்கள். ஏதோ ஒரு விரக்தி. நடுத்தர வயதினர், படித்தவர்கள் - இவர்கள் மிகவும் கண்ணியமாகவே நடந்து கொண்டனர். பெண்கள் அனைவருமே கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டனர். இளைஞர்களும் அலட்சியப்படுத்தவில்லை.

இதெல்லாம் நம் கண்முன்னே நடந்த நிகழ்வுகள் தான். நம்மைப் பொறுத்தவரை அரசாங்கம் சொல்வதைக் கேளுங்கள் என்பது தான். அலட்சியப்படுத்தாதீர்கள். இப்போதும் கூட நாம் கட்டுப்பாட்டோடு தான் இருக்க வேண்டியுள்ளது. பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுவிட்டனர். அதற்காக நாம் இஷ்டத்திற்குச் சுற்றலாம் என்பதல்ல அரசாங்கத்தின் நோக்கம். இன்னும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடியுங்கள் என்பது தான் அவர்களின் அறிவுரை.

கோபிட்-19 எப்போது நாட்டைவிட்டு அகலும் அல்லது உலகைவிட்டு அகலும் என்பதையெல்லாம் யாராலும் கணிக்க முடியவில்லை. இந்த வியாதியே சீனர்களின் ஏற்றுமதி என்று பலர் குற்றம் சாட்டினார்கள். ஆனால் இப்போது சீனாவே ஆடிப்போயிருக்கிறது!  சீனாவின் ஷங்காய் நகரில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவிட்-19 தொற்று பரவி வருகிறது. அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள். காரணம் சட்டத்தை மீறினால் அவர்கள் சுட்டுத்தள்ளவும் தயார்! நம்மால் இப்படியெல்லாம் செய்ய முடியாது!

மலேசிய சீனர்கள் எப்படி கட்டுப்பாடுகளோடு நடந்து கொள்கிறார்களோ  அப்படியே நாமும் செய்தால் போதும்! பாதிப்புகள் குறையும்! நாமும் மகிழ்ச்சியோடு வாழ்வோம்!

No comments:

Post a Comment