Friday 8 April 2022

Malu Apa Bossku

 


மேலே உள்ள மலாய் சொற்றொடர்  முன்னாள் பிரதமர் நஜிப் ஆதரவாளர்களிடையே மிகவும் பிரசித்தம்!

நல்ல காரணத்துக்காக அப்படி ஒர் சொற்றொடரை பயன்படுத்திவந்தால் யாரும்  அதனைக் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால் அதன் நோக்கம் என்பது தவறானது! எப்படிப் பார்த்தாலும் தவறு கண்டிக்கப்பட வேண்டும்.

மொழிபெயர்ப்பில் அது பல அர்த்தங்களைக் கொடுக்கிறது. மக்கள் மனதில் தவறான எண்ணங்களை ஏற்படுத்துகிறது.  வளரும் தலைமுறைக்குத் தவறான பாடத்தைப் போதிக்கிறது

அதனை எப்படி வேண்டுமானாலும் நாம் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.

சில மாதிரிகள்:
பாஸ்! நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்!
பாஸ்! எதனால் நாம் வெட்கப்பட வேண்டும்!
பாஸ்! கொள்ளையடிப்பது நமது உரிமை! வெட்கப்பட ஒன்றுமில்லை!.
பாஸ்!  நாம் கொள்ளையடிக்கலாம்! யார் கேள்வி கேட்பது?
பாஸ்! இது நமது சொத்து! யாரும் கேள்வி கேட்க முடியாது!
பாஸ்! இது நமது உரிமை! நாம் கொள்ளையடிக்கலாம்!

இப்படி பலவாறாக அதன் அர்த்தத்தை, நமது வசதிக்கேற்ப, அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்!

பொதுவாக முன்னாள் பிரதமர் நஜிப்பின் ஆதரவாளர்கள் சொல்ல வருவதெல்லாம்: பாஸ்! நாம் திருடலாம்! நாம் திருடுவது நமது சொத்து! எவனும் கேள்வி கேட்க முடியாது!

ஆக அவர்கள் சொல்லுவதெல்லாம் எங்கள் பாஸ் திருடியது ஒன்றும் பெரிய குற்றமில்லை என்பது தான்!

ஆனால் இங்கு நடப்பது என்னவெனில் மக்களிடையே  அவர்கள் விஷத்தை விதைக்கிறார்கள்! இளம் பிராயத்தினரிடையே திருடுவது குற்றமில்லை என்கிற எண்ணத்தை வளர்க்கிறார்கள்! ஏற்கனவே நாட்டில் இலஞ்சம், ஊழல் என்று மக்கள் முணகிக் கொண்டிருக்கிருக்கும் இந்த நேரத்தில் இலஞ்சம் வாங்குவது குற்றமில்லை என்றால் எப்படி?

ஒருவர் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பணத்தை அது கொள்ளையடிக்கப்படவில்லை அது எனக்கு சேர வேண்டிய பணம் தான் என்று நியாயப்படுத்தினால் எப்படி? நஜிப்பின் ஆதரவாளர்கள் அதனை நியாயப்படுத்துகிறார்கள்! ஒருவர் குற்றவாளி என்பது போய் நீங்கள் அனைவருமே குற்றம் செய்யலாம்  அது தப்பில்லை ஏன்கிறார்கள்! இதன் எதிரொலி எப்படியிருக்கும்? அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் இனி பயப்பட ஒன்றுமில்லை என்று  தான் நினைப்பார்கள்!

கடவுள் இருக்கிறார் என்கிற பயம் எல்லாம் போய்விட்டது! நஜிப் வெற்றிபெற்றால் அவர் கடவுள் நிலைக்கு உயர்ந்து விடுவார்!
                                 

No comments:

Post a Comment