Thursday 10 March 2022

வங்காள தேசிகள் தேவைதானா?

 


நமது நாட்டில் மீண்டு வங்களாதேசிகளின் 'படையெடுப்பு' நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை முதாலாளிகளே நேரடியாக வங்களாதேசிகளைத் தருவிப்பார்கள்   என்று அரசாங்க கூறினாலும் முதலாளிகளே முகவர்களைத்  தான் நாடுவார்கள் என்பது ஒன்றும் இரகசியமில்லை!

ஆனாலும் ஒரு சில விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே நமது நாட்டில் நாட்டிற்குள் திருட்டுத்தனமாக புகுந்தவர்கள் என்று சொல்லி  பலரைச்  சிறைப்படுத்தி  சோறு போட்டு வளர்க்கிறோம்.

இன்னும் பலர் அகதிகள் என்று சொல்லி அவர்களும் நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்! அவர்களைப் பிச்சை எடுக்கவும் அனுமதி கொடுத்திருக்கிறோம்!

இதில் ஒரு பகுதியினர் தான் மியான்மார் நாட்டு அகதிகள்.      அவர்கள் அகதிகள் என்றாலும்  அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கொடுக்கலாம். சமீபத்தில் கூட ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. இரண்டு மியான்மார் சிறுவர்கள் குப்பைகளிலிருந்து எடுத்து சாப்பிட்ட பின் வாந்தியெடுத்து இறந்து போனதாக செய்திகள் வெளியாயின.

இந்த மியான்மார் அகதிகள் இஸ்லாமிய மதத்தினர். நமது நாடு இஸ்லாமிய நாடு என்று மார்தட்டுவதில் யாருக்கும் பெருமை இல்லை. ஏன் இந்த அகதிகளுக்கு நாம் உதவுவதில் மட்டும் தயக்கம்  காட்டுகிறோம்? இங்குள்ள இஸ்லாமியர்களை விட  அவர்கள் கீழ்த்தரமானவர்களா? ஏதோ ஒன்று இவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே சீனப்பெருஞ்சுவரை  எழுப்புகிறது!

இந்த அகதிகளுக்கு இங்கு தங்கும் இடம் கொடுத்து அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கொடுத்து அவர்களைக் கௌரவமாக வாழவைப்பது நமது கடமையாகவே நான் நினைக்கிறேன். அவர்களும் பல இடங்களிலும் வேலை செய்து வருகின்றனர். அதனை அவர்கள் அதிகாரபூர்வமாகச் செய்ய வேண்டும். அவர்களும் இந்நாட்டில் வாழ வேண்டும். அவர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்.

யாரோ ஒரு சில அரசியல்வாதிகள் பயன்பெறுகிறார்கள் என்பதற்காக வங்களாதேசிகளையே கட்டிக்கொண்டு அழுவது  நமது நாட்டிற்கு அவப்பெயரைத் தான் கொண்டு வரும்! 

நமது நாட்டிற்குத் தேவை வங்காளதேசிகள் அல்ல! இங்கு ஏற்கனவே அகதிகள் என்கிற பெயரில் பல நாட்டு மக்கள்  இருக்கின்றனர். அவர்களையும் வாழவைப்பது நமது கடமை.

No comments:

Post a Comment