Friday 25 March 2022

பெண்களே! படித்தது போதும்!

 

                                        Girls' High Schools closed in Afghanistan.

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது!

பாவம்! தாலிபான்கள் ரொம்பவம் தடுமாறுகிறார்கள்! பயங்கரவாதிகளாக இருந்தவர்கள்! இப்போது அவர்கள் நினைத்தது போலவே ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றிவிட்டார்கள்! அடுத்து என்ன செய்வது என்று அவர்களுக்கும் புரியவில்லை! அவர்களை ஆதரித்து வந்த  ஒருசில இஸ்லாமிய நாடுகளுக்கும் புரியவில்லை!

அதென்னவோ தாலிபான்களைப்  புரிந்து  கொள்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல! பெணகள் கல்வி கற்கக்கூடாது என்பது அவர்களின் வாதம்.  அப்படி ஒரு வாதத்திற்கு அவர்கள் வரக்காரணம் என்ன, நமக்குத் தெரியவில்லை!

கடந்த ஏழு மாதங்களாக இடைநிலைக் கல்வி பெண்களுக்கு மறுக்கப்பட்டு  இப்போது தான் மீண்டும் பள்ளிகள் ஆரம்பமாகின. ஆனால் பள்ளிகள் தொடர முடியவில்லை. ஓரிரு நாட்களே இயங்கிய பள்ளிகள் உடனடியாக தடை செய்யப்பட்டன.

இப்போது மீண்டும் முன்பு போலவே ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள பெண்களின் கல்விக்குத் தடையைக் கொண்டுவந்திருக்கிறார்கள் தாலிபான்கள். இதன் பின்னணி என்ன என்பது பரம இரகசியம்!

ஏற்கனவே உலகில் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளனன.  எல்லா நாடுகளிலும் பெண்கள் கல்வி கற்கத்தான் செய்கின்றனர்.  பெண்களின் கல்விக்குத் தடை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லா நாடுகளிலும் உயர்கல்வி அவர்களுக்கு  மறுக்கப்படவில்லை. பெண்கள் டாக்டர்கள், இஞ்சினியர்கள், கணக்கர்கள் என்று எல்லாத் துறைகளிலும் அவர்கள் ஆளுமை செலுத்துகின்றனர். ஏன் நமது நாட்டிலேயே நாட்டின்  மிக உயர்ந்த பதவியான மத்திய வங்கியான,  பேங்க் நெகாரா  மலேசியா ஆளுநராக ஒர் பெண்மணியான டாக்டர் ஸெட்டி அக்தார் அஸிஸ்  இருந்திருக்கிறாரே!

ஏனைய நாடுகளில் பெண்களின் முன்னேற்றம் பெருமையாகப் பார்க்கப்படுகிறது. பெண் டாக்டர்கள் இல்லையென்றால் பெண்களுக்கான பிரசவத்தைப் பார்ப்பவர்கள் யார்? அப்படியானால் இன்னொரு சட்டத்தையும் கொண்டு வரலாம்!   திருமணத் தடை சட்டம் ஒன்றைக் கொண்டு வரலாமே!

இவர்களைப் போன்ற கோமாளிகளை ஆதரிக்க நம் நாட்டிலும் பாஸ் போன்ற அரசியல்கட்சிகள் இருப்பது வெட்கக் கேடானது! அப்படியானால் பாஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் பெண்கள் கல்விக்குத் தடை போடலாமே! போட்டுப் பார்க்கட்டுமே, என்ன ஆகும் எனப் பார்க்கலாம்!

இது போன்ற முட்டாள்தனங்களுக்கு நாம் ஆதரவு கொடுக்கக் கூடாது. பெண்கள் முன்னேற வேண்டும்.

நாம் சொல்ல வருவதெல்லாம் சக இஸ்லாமிய நாடுகள் ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கு நெருக்கதல்களை ஏற்படுத்த வேண்டும்.   பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். மீசை தாடி, கரடுமுரடான முகம், கையில் ஏந்நேரமும்  துப்பாக்கி,  எறிக்குண்டு  - இப்படியே வாழ்ந்துவிட்ட அவர்களுக்கு வெளி உலகத்தோடு ஒத்துப்போக முடியவில்லை!

பெண்களே! உங்கள் கல்வியை நிறுத்தாதீர்கள்! முடிந்தமட்டும் படியுங்கள்! நீங்கள் இல்லாமல் முன்னேற்றம் இல்லை!

No comments:

Post a Comment