Wednesday 16 March 2022

எங்களைவைச்சி காமடி கீமடி பண்ணலியே!

 


மித்ரா (இந்தியர் உருமாற்றத் திட்டம்)! இது பற்றி பேசப்போகுமுன் ஒரு சில விஷயத்தைக் கவனத்திற்குக் கொண்டு வருவோம்.

மித்ரா என்றாலே (இதற்கு முன்னர் செடிக்) நமக்கு ஏனோ  "எதற்கும் பயனில்லை!" என்கிற எண்ணம் இந்தியர்களிடையே ஏற்பட்டுவிட்டது! நல்லது செய்தால் நாம் அதனைப் பாராட்டுவோம். எதுவும் நடக்கவில்லை என்றால் "போடா! போ!" என்று ஒதுக்கிவிட்டுப் போவோம்! அவ்வளவுதான்! "யாரை நம்பி நாம் பிறந்தோம் போங்கடா போங்க!" இந்த சமூகம் யாரையும் நம்பியில்லை! நமது கையை நம்பியவர்கள் நாங்கள்!

மித்ரா உதவித்திட்டம் பிரதமர் அமைச்சின் கீழ் வரும் என  நாம் எதிர்பார்த்திருந்தோம்.  ம.இ.கா. தலைவர் கேட்டுக் கொண்டதை பிரதமர் காதில் போட்டுக் கொள்ளவில்லை!

மேலே காணும் அறிவிப்பைக் காணும் போது அது மீண்டும் ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் தான் வருகிறது. 

ஒற்றுமத்துறை அமைச்சர் என்றாலே அவர் தொடர்ந்தாற் போல இந்தியர்களைக் கேலி செய்பவராகவே தோன்றுகிறார்! மித்ரா மீதான எந்த ஒரு கேள்விக்கும்  பதில் அளிக்க மறுக்கிறார். சிரிக்கிறார்! கிண்டல் பண்ணுகிறார்! முகத்தைக் கல்லுளிமங்கிணியைப் போல வைத்துக் கொள்கிறார்! 

இவரே மித்ராவுக்குச் சரியான ஆள் என்று பிரதமரே நினைக்கும் அளவுக்கு இவர் செயல்படுகிறார் என்றே தோன்றுகிறது! அதனால் தான் பிரதமரும் இதுபற்றி கண்டுகொள்வதில்லை! ம.இ.கா. வினரும் 'அவரே நல்ல தேர்வு!' என்று நினைக்கும் அளவுக்கு ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர். ஆமாம் ஜனநாயகத்தில் யார் வந்தால் யாருக்கு இலாபம் என்பது தானே கணக்கு!

அமைச்சர் ஹலிமா கேள்வி கேட்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக்  காமடிபீஸாக நினைத்து செயல்படுகிறார்!  பதிலளிக்க வேண்டிய நேரத்தில் 'போய்! தோசை சாப்பிடுங்கள்!'  என்று கிண்டலடிக்கிறார்! நாடாளுமன்றத்தை ஏதோ தன் வீட்டுத் தகரக்கொட்டகையாக நினைக்கிறார்! அங்கு விற்கும் தகரக்கொட்டைகையில் நாசிலிமா வாங்கி சாப்பிடுகிறவர்  போல பேசுகிறார்!

இப்போது மீண்டும் அவருடைய அமைச்சே மித்ராவுக்குப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பது மேலும் சிக்கல்களைத்தான் ஏற்படுத்தும். முன்பு என்ன நடந்ததோ மீண்டும் அது தான் நடக்கும்! அப்போது என்ன என்ன மழுப்பல்கள் மூலம் கடந்து சென்றாரோ அதனையே தொடர்ந்து செய்வார் என எதிர்பார்க்கலாம்!

ஒரு முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த முறையும்  ஒற்றுமைத்துறை அமைச்சும்-ம.இ.கா.வும்  சேர்ந்து வழக்கம்போல இந்தியர்களை உருமாற்றும் என நமபலாம்!

நமது மக்களை வைத்து ஹலிமாவும் விக்னேஸ்வரனும் காமடி பண்ணுகிறார்கள்!
                              

No comments:

Post a Comment