Saturday 26 March 2022

ஆசிரியர் இல்லை! வகுப்பு இல்லை!

 


ஆசிரியர் இல்லையாம்! அதனால் தமிழ் வகுப்பு இல்லையாம்!

அதுவும் இத்தனை ஆண்டுகள் தமிழ் வகுப்புகள் நடந்து கொண்டு வந்த ஒரு பள்ளியில் அந்தப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் மாற்றப்பட்டதினால்  இனி தமிழ் வகுப்பு இல்லை என்று கைவிரித்து விட்டதாம் பள்ளி நிர்வாகம்!

அதனால் சொல்லுகிறார்கள் தலை சரியில்லை என்றால் வால் தலையாகிவிடும்!  கல்வி அமைச்சில் வேலை செய்கின்றவர்கள் வாலாக செயலாற்றுகிறார்கள்! அதனைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பார்த்து வியந்து போகிறார்!

இப்படி எல்லாம் முட்டாள்தனத்தை எங்காவது பார்த்திருப்போமா?  நம் நாட்டில் கண்முன்னே பார்க்கிறோம். என்னமாய்  பதிலை வைத்திருக்கிறார்கள்! ஆசிரியர் இல்லையாம்! அதனால் வகுப்புகள் இல்லையாம்!

அப்படியென்றால் தலைமையாசிரியரின் வேலை தான் என்ன? அவர் காலில் போட்டிருக்கும் பூட்ஸ்ஸை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாரா? ஆசிரியர் இல்லையென்றால் இனிமேல் ஆசிரியர் கிடைக்கமாட்டாரா? நாட்டில் வேறு ஆசிரியர்களே இல்லையா?

நாட்டில் ஆசிரியர் பாற்றாக்குறையா?  அப்படியென்றால் கல்வி அமைச்சின் வேலை தான் என்ன?  வெட்டிப் பிளக்கிறார்களோ! ஆசிரியர் பற்றாக்குறை என்பது கல்வி அமைச்சின் வேலை. ஆசிரியர் இல்லையென்றால் தலைமை ஆசிரியரின் வேலை. தலைமை ஆசிரியர் ஏன் தனது கடமையைச் செய்யவில்லை என்பது தான் கேள்வி.

ஆசிரியர் பற்றக்குறையைத் தீர்க்க சுலபமான வழி மற்ற நாடுகளிலிலிருந்து ஆசிரியர்களைத் தருவிப்பது தான். சிங்கப்பூர், இலங்கை, தமிழ் நாடு போன்ற இடங்களிலிருந்து வருவித்துக் கொள்வதில் பிரச்சனைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. கையேந்துவதில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லவே!

காலங்காலமாக நம்மைத் தூக்கி சுமக்கும் ம.இ.கா. வினர் எங்கே ஓடி ஒளிவார்கள் என்று பார்ப்போம்! எதிர்கட்சியினர் பேச்சு சபை ஏறாது என்பதை நாம் உணர்ந்த்திருக்கிறோம்.

ஆசிரியர் உண்டு! வகுப்பு உண்டு!

No comments:

Post a Comment