Tuesday 29 March 2022

எச்சரிக்கிறோம்! விலகி இருங்கள்!

 

                                                           LOW SIEW HONG

பாஸ் கட்சியிலிருந்து கடுமையான எச்சரிக்கை  ஒன்று முஸ்லிம் அல்லாத மலேசியர்களுக்கு  விடுக்கப்பட்டிருக்கின்றது!

ஒரு பக்கம் தனித்து வாழும் இந்து  தாயான லோ சியு ஹொங் + அவருடைய மூன்று குழந்தைகள். இன்னொரு பக்கம் இஸ்லாமிய பாஸ் கட்சியினர்.

இஸ்லாமிய கட்சியின் எச்சரிக்கை என்பது:   இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்ட லோ-வின் மூன்று  குழைந்தைகள் மீண்டும் இந்து மதத்திற்கு மதம் மாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது. நாங்கள் அதனை எதிர்ப்போம்.. அவர்களின் மதமாற்றத்திற்காக யார் பாடுபட்டாலும் இந்நாட்டிலுள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பொங்கி எழுவர் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கு முன்பு  லோவின் மூன்று குழந்தைகளின் புகைப்படங்களைப் பத்திரிக்கைகளில் போட்டு அவர்களை அவமதிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை அனைத்து ஊடகங்களும் பின்பற்றுகின்றன. அது ஒரு தடை.

இப்போது பாஸ் கட்சியிடமிருந்து இப்படி ஓர் எச்சரிக்கை.  மதமாற்றும் விஷயத்தில் எங்களுக்கு எந்த நியாயமும் தேவையில்லை! நீதிமன்றம், வழக்கறிஞர்கள் - அது யாராக இருந்தாலும் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்கிறார் பாஸ் கட்சியின்  தகவல் பிரிவு  தலைவர்.  வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரே அவர் தரப்பு தோல்வியைத் தழுவும் என்று அவரே முன்னறிந்துவிட்டார்! ஆக, அவர் செய்வதோ சொல்வதோ தவறு என்பது அவருக்கே தெரியும் என ஊகிக்கலாம்!

மனிதர்களால் தீர்த்துக் கொள்ளப்பட முடியாத  விஷயம் என்று ஒன்று இருந்தால் அதைத் தீர்த்து வைக்க வேண்டிய இடம்  நீதிமன்றங்கள் தான். நியாயம் கிடைக்கும் என்பதால் தான் நாம் நீதிமன்றம் போகிறோம்.

ஆனால் பாஸ் கட்சியினர் அதற்கும் உலை வைக்கின்றனர். நான்கு பேர் கொண்ட ஒரு சிறிய குடும்பத்தை இஸ்லாமியர் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும்  என்கின்றனர் பாஸ் கட்சியினர்.

ஒன்றை அவர்கள் உணரவில்லை. நல்லவர்கள் என்கிற ஒரு பிரிவினர் எல்லா சமயங்களிலும் இருக்கின்றனர்.  எல்லா இனத்தவர்களிலும் இருக்கின்றனர். நல்லவர்களுக்கு எப்போதுமே காலம் உண்டு.

சத்தியமே வெல்லும்!

No comments:

Post a Comment