Monday 21 March 2022

பொறுப்பற்ற பாதுகாவலர் நிறுவனங்கள்!

 


பள்ளிக்கூடங்களில் பாதுகாவலர்களாக வேலை செய்பவர்கள் யாருடைய பொறுப்பில் இருக்கிறார்கள் என்கிற கேள்வி இப்போது எழுகிறது!

நிச்சயமாக அவர்கள் பள்ளிக்கூடங்களால் வேலைக்கு அமர்த்தப்பட்டவரகள் அல்ல. ஆனால் அவர்கள் குறைந்தபட்சம்,  பள்ளி நிர்வாகத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம்.

பாதுகாவலார்கள்,  பாதுகாப்பு நிறுவனங்களால் வேலைக்கு அமர்த்தப்படுபவர்கள். வேலைக்கு அமர்த்தும் முன் அவர்கள் பாதுகாவலர்களாக வேலை செய்யும் தகுதி உடையவர்களா என்பதை காவல்துறையுடன் உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் குற்றப்பின்னணி இருந்தால் அவர்கள் பாதுகாவலர்களாக வேலை செய்யும் தகுதியை இழந்துவிடுவார்கள். பாதுகாவலர் வேலைக்கு முக்கியத்தகுதி என்பது எந்தக் குற்றப்பின்னணியும் இருக்கக் கூடாது என்பது தான்.

சமீபத்தில்  பள்ளிக்கூட பாதுகாவலர் ஒருவர்  குற்றப்பின்னணி உடையவர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பள்ளியில் பணிபுரிந்து வந்திருக்கிறார். ஏற்கனவே அவர் பாலியில் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்.  கடைசியாக ஒரு பெண்ணை பள்ளியில் மறைவான இடத்தில் எரியூட்டி கொலை செய்திருக்கிறார்.. இந்த விசாரணையின் போது  அவர் மீதான குற்றங்கள் தெரிய வந்திருக்கின்றன.

பள்ளிகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தினசரி போய் வருகின்றனர். இது போன்ற பாதுகாவலர்களால் எந்த நேரமும் அவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது தான் பெற்றோர்களின் கவலை.

இதில் முக்கிய குற்றவாளிகள் என்றால் பாதுகாவலர் நிறுவனங்கள் தான். காவல்துறையின் அனுமதி இல்லாமல் அவர்களால் யாரையும் வேலைக்கு அமர்த்த முடியாது. அப்படி அவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் என்றால்  அந்த நிறுவனங்கள் குற்றம் புரிகின்றன என்று பொருள். அந்த நிறுவனங்கள் குற்றம் புரிந்தாலும் யாருடனோ அந்த நிறுவனங்கள் சமரசம் செய்து கொள்கின்றனர் என்று அர்த்தம் கொள்ளலாம்.

ஆனால் அந்த நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை.  அத்தகைய நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்ப்பது  தவறு அல்ல.

குற்ற இழைத்தவர்கள் எந்தவித தயக்கமுமின்றி ஆங்காங்கே வேலை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். சமீபத்தில்  பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. காவல்துறை விசாரித்ததில் அந்த ஓட்டுனர் மீது ஏற்கனவே கஞ்சா அடித்துவிட்டு  பேருந்து ஓட்டி விபத்துகளைச் சந்தித்தவர் என்று தெரிய வந்தது! அதில் விசேஷம் யாதெனில் அவர் போலிசாரால் தேடப்பட்டு வந்தவர்! அது தான் டாப்!

என்னவோ நடப்பது நடந்து கொண்டுதான் இருக்கும் போலிருக்கு! நாம் சொல்லுவதை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.  எது எப்படி இருந்தாலும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் பெற்றோர்கள் பொங்கி எழுவார்கள் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை!

காவல்துறை அலட்சியம் காட்டினால்  பொது மக்களுக்கு வருவது என்னவோ துன்பம் தான்!

No comments:

Post a Comment