Monday 7 March 2022

இது சரியான கேள்வி?

 

                                        சிங்கப்பூரால் முடியும்! நம்மால் முடியாதா?

ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் இம்முறை வித்தியாசமான தேர்தலாக இருக்கும் என நம்பலாம்.

வருகிற சனிக்கிழமை 12-3.2012 அன்று சட்டமன்றத்  தேர்தல். இளைஞர் பலர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கின்றனர்.  அதுவே ஒரு மாற்றம்!

இதற்கு முன்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எழாத பல கேள்விகள் இந்தத் தேர்தலில் எழுப்பப்பட்டிருக்கின்றன!

ஜொகூர் - சிங்கப்பூர் இரண்டும் அண்டை நாடுகள்.  ஒன்று மாநிலம் இன்னொன்று தனி நாடு.   உண்மையைச் சொன்னால் சிங்கப்பூர் அடைந்த மாபெரும் வளர்ச்சியின் பயனாய் ஜொகூர் மாநிலம் அதற்கு ஈடான வளர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை!

அதற்கான காரணங்கள் என்ன? நாம் மிகவும் பிந்தங்கி இருக்கிறோம். ஏன் பணத்தையே எடுத்துக் கொண்டால்  சிங்கப்பூருடைய ஒரு வெள்ளியை நாம் மூன்று வெள்ளி கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது! அந்த அளவு பின்னடைவு!

நமது இளைஞர்களுக்குப்  போதுமான வேலை வாய்ப்புக்களை உருவாக்கவில்லை. சிங்கப்பூர் மட்டும் இல்லாவிட்டால் ஜொகூர் மலேசியாவில் மிகவும் பிந்தங்கிய மாநிலமாக மாறியிருக்கும்! அந்த அளவுக்கு ஜொகூர் மக்களைச் சிங்கப்பூர் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது!

இலஞ்ச ஊழல் என்றாலே சிங்கப்பூரை நம்மால் தொட முடியாத இடத்தில் இருக்கிறோம்!  உலகளவில் பார்க்கும் போது கூட மிகவும் இலஞ்ச ஊழல் குறைந்த நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. நமது நாட்டில் இலஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது!  இலஞ்சம் இல்லாமல் காரியங்கள் நடக்காது! இலஞ்சத்திற்கு வழிகாட்டிகள் நமது அரசியல்வாதிகள்!

எப்படிப்  பார்த்தாலும்  சிங்கப்பூரின் பொருளாதார  வளர்ச்சி  என்பது தான் நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். எந்தவிதமான இயற்கை வளங்கள் இல்லாத ஒரு நாடு சிங்கப்பூர்.  எல்லாவித வளங்களையும் கொண்ட ஒரு மாநிலம் நமது  ஜொகூர்.  ஆனால் நடப்பது என்ன? நாம் தான் அவர்களிட,இருந்து பாடம் கற்க வேண்டியிருக்கிறது!

இது நாள்வரை ஜொகூர் மாநிலத்தை வழிநடத்தியவர்கள்  தூர நோக்குப் பார்வையற்றவர்கள்.  மாநில முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைப் போட்டவர்கள்! மக்களைப்பற்றி சிந்திக்காதவர்கள்.  பொதுவாக ஏதோ அரைகுறை அரசியல்வாதிகளை வைத்துக் கொண்டு மாநிலத்தை அவர்கள் கையில் ஒப்படைத்திருந்தோம்!

ஜொகூர் மக்களே! இது தான் தக்க தருணம். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லையென்றால் அப்புறம் உங்கள் பாடு அவர்கள் பாடு! இது நாள்வரை நாம் பார்த்தவர்கள் எல்லாம்  ஏமாற்றுப் பேர்வழிகள்! 

நல்லது நடக்க வேண்டுமென்றால் அது உங்கள் கையில் தான

No comments:

Post a Comment