Friday 11 March 2022

முகக்கவசங்கள்

 

கோவிட்-19 தடுப்புக்காக நாம் அணியும் முகக்கவசங்கள் இன்று மானுடத்துக்கே  பெரும் சவலாக வளர்ந்து கொண்டிருக்கிறது! 

மக்கள் நாலாப்பக்கமும் பல இடையூறுகளைச் சந்தித்து வருகிறார்கள். அனைத்துக்கும் நாமே தான் காரணம். நாம் எந்த ஒரு ஒழுங்கு முறையையும் கடைப்பிடிக்காததால் அதன் பலனை நாம் அனுபவித்து வருகிறோம்!

இப்போது நாம் அணிந்து கொள்ளும் முகக்கவசங்கள் கூட மனிதகுலத்திற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியாத மாறி வருகிறது! ஏதோ ஒரு வியாதிக்கு முகக்வசம் அணிந்தால் ஏதோ ஒன்று புதிதாக  முளைத்துக் கொண்டு வருகிறது! ஒன்றிலிருந்து இன்னொன்று ஆரம்பம்! இதற்கு முடிவே இல்லையோ!

நமது நாட்டில் மட்டும் கடந்த 2020 ஆண்டில் சுமார் 90 டன்  எடை கொண்ட பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் ஒவ்வொரு நாளும் குப்பைத் தொட்டிகளுக்குள் தஞ்சம்  புகுந்திருக்கின்றன!

இது நமது நாட்டு நிலவரம் மட்டும் தான். இதையே உலக அளவில் பாருங்கள்.  ஐயோ! நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை! இவைகளையெல்லாம் எரித்துப் போட்டுவிடலாம் என்றால் அதன் மூலம் வேறு என்ன வியாதி வருமோ என்கிற அச்சமும் வருகிறது! இதையே கடலில் கொண்டு போய் கொட்டினால் கடலில் உள்ள நீந்துவன அனைத்தும் ஏதோ ஒரு புதிய உணவு என்று நினைத்து சாப்பிடவும் சாத்தியம் உண்டு!

ஏற்கனவே பாவம்! நாம் சாப்பிடுகின்ற கடல் மீன்கள்,   மீன்களாகவே தெரியவில்லை! ஏதோ பிளாஸ்டிக் பொருள்களைச் சாப்பிடுவது போல்  மீன்களையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்!  மீன்களுக்கு எது உணவுப் பொருள், எது பிளாஸ்டிக், எது முகக்கவசம் என்கிற வேறுபாடுகள்  இல்லாமல் அனைத்தையும்  வெளுத்து வாங்குகின்றன! கடைசியில் அங்குச் சுற்றி இங்குச் சுற்றி மீண்டும் நமது வயிற்றுக்குத் தான் போகின்றன! 

நமது கவலையெல்லாம்  நாட்டில் இப்போது இல்லாத குப்பைகளா? இருக்கின்ற குப்பைகளுக்கே ஒரு தீர்வு  காணமுடியாத நிலையில்  இப்போது  புதிதாக இன்னொன்று  வந்து உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறதே என்கிற ஆதங்கம் தான்! என்ன செய்ய?

மேற்கு நாடுகளின் நிலை வேறு! அவர்கள்  அவர்களின் குப்பைகளைத்  தூக்கி  ஏதோ ஒரு வெளி நாட்டுக்கு,  தங்களுக்கு வேண்டிய நாடுகளுக்கு, பணத்தைக் கொடுத்தாவது அனுப்பி விடுவார்கள்! இதெல்லாம் அவர்களுக்கு சகஜம்! நாம் எங்கேயும் அனுப்ப முடியாது!

பார்ப்போம்!  இதற்கான தீர்வு  காணப்படும் வரை பொறுத்திருப்போம்!

No comments:

Post a Comment