அப்போது எல்லாம் ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை நாள்கள் என்பது எங்களுக்குப் புரியாத விஷயம். ஏனேனில் காலண்டர் என்பது பயன்பாட்டில் இருந்ததா என்பதே தெரியவில்லை. அப்போது எங்களில் ஒருவன் அதனை எளிமையாக விளக்கினான்.
இதோ மேலே உள்ள கையில் விரல்முட்டிகளைப் பார்க்கிறீர்கள். அதன் முதல் முட்டி உயர்ந்து நிற்கிறது. அது ஜனவரி மாதம். அப்புறம் தாழ்ந்து, அப்புறம் உயர்ந்து, அப்புறம் தாழ்ந்து - அப்படியே போய்க் கொண்டிருக்கும். அதில் உயர்ந்து நிற்பவை 31 நாள்கள் தாழ்ந்து இருப்பவை 30 நாள்கள் ஃபெப்ரவரியைத் தவிர. இது தான் கணக்கு. காலண்டர் இல்லாத காலத்தில் இப்படித்தான் நாங்கள் மாதத்தின் நாள்களைக் கணக்கிடுவோம். இப்போதும் நான் இதே முறையைத்தான் கையாளுகிறேன்! இது தான் நம் கையே நமக்கு உதவி என்பதோ1
அறிவோம்: நாடு நமக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதாக தமிழ் மக்கள் நினைக்கின்றனர். ஆனால் மலையாளிகளும், தெலுங்கர்களும் அப்படியெல்லாம் புலம்பவில்லை. அவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். தமிழர்களே! நமது கடமையை நாம் செய்வோம். நம்மை நாமே உயர்த்திக் கொள்ளாதவரை, பணம், துட்டு, மனி இல்லாதவரை, நமது குரல் எடுபடாது! எடுபட வைப்பது தான் நமது வேலை! உழைப்பைத் தவிர வேறு எதுவும் நமக்கு உயர்வைத் தராது!