Wednesday, 23 July 2025

தலைவணங்குகிறேன் புனிதன், சஞ்சே சார்!

 யார் என்ன சொன்னாலும்  சரி  நீங்கள் செய்கின்ற தொண்டு என்பது  காலத்தால் அழிக்க முடியாதது. 

டாக்டர் புனிதன் அவர்களுக்கும் டாக்டர் சஞ்சே அவர்களுக்கும்  எனது இதயங்கனிந்த வாழ்த்துகள். எல்லாராலும் செய்ய முடியாத சேவையை   நீங்கள் செய்கிறீர்கள். சமூக அக்கறை என்பதெல்லாம்  இப்போது ஏதோ ஓரிருவரிடம்  மட்டுமே உண்டு. அரசியல்வாதிகளிடம் சுத்தமாக இல்லை.  சுயநலமே அவர்களின் சமூக அக்கறை!

உங்கள் இருவரைப் பற்றியும்  பல அவதூறு செய்திகள்  வருகின்றன என்பது நமக்கு வருத்தம் தான். ஆனால் இதனைத் தவிர்க்க முடியாது.  நல்லதைச் செய்தால்  சிலருக்குப் பொறுக்காது.  அவதூறுகளைப் பரப்புவர்களில் பலர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்!  நாம் படித்த சமூகமாக மாறி வருகிறோம்  என்றாலே  அவர்களுக்கு  வயிறு எரிகிறது!

என்னைக் கேட்டால் நமது மாணவர்கள் உயர்க்கல்வி படிப்பதற்குத் தடையாக இருப்பவர்கள்   நமது அரசியல்வாதிகளும், தனியார் கல்லூரிகளும் தான். அரசியல்வாதிகள் தனியார் கல்லூரிகளிடமிருந்து பல இலட்சங்களைக் கறந்து விடுகின்றனர்! அதனால் தான் அரசாங்கக் கல்லூரிகளிடமிருந்து  நம் மாணவர்களுக்குப்  போதுமான ஆதரவு  கிடைப்பதில்லை. இதில் கலவி அமைச்சை சேர்ந்தவர்களுக்கும் பங்கு உண்டு. வெளியே உள்ளவர்கள் யாரும் நமக்கு எதிரிகள் இல்லை. இந்த மூன்று தரப்பினர் தான் குற்றவாளிகள்.  ஆனால் என்ன செய்ய? எல்லாரும் தங்கள் பிள்ளைகளையே வழக்கறிஞராக வைத்துக் கொண்டு செயல் படுகிறார்கள்!  ஆனால் என்றுமே இவர்களால் தப்பிக்க முடியாது. .

இந்த இரு டாக்டர்களுக்கும் நமது வேண்டுகோள் இது தான். இவர்களுக்கெல்லாம் நீங்கள் பணிந்து விடாதீர்கள். இதெல்லாம் ஒரு நாதாறிக் கூட்டம். நாசம் பண்ணத்தான் தெரியுமே தவிர  நல்லதைச் செய்யத் தெரியாது.  உங்களின் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன். நமது மக்கள் அனைவருமே  உங்கள் மீது அன்பு கொண்டுள்ளனர். நாங்கள் அனைவரும் பிரர்த்திக்கிறோம்.

நல்லதையே செய்யுங்கள். நாடு நம் கைவசம்.

No comments:

Post a Comment