Thursday 10 November 2016

அதிரடி கொடுத்தார் மோடி!


இந்தியப் பிரதமர் மோடி அதிரடியான அறிவிப்பு  ஒன்றினைச் செய்திருக்கிறார்!

ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும், ஐனூறு ரூபாய் நோட்டுக்களும் செல்லாது என அதிரடியான அறீவிப்பு  செய்து அந்த நோட்டுக்களைச் செல்லாதபடி ஆக்கிவிட்டார்!

இது ஒரு துணிச்சலான  முடிவு என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆரம்பத்தில்,  குறிப்பாக நடுத்தர குடும்பங்கள் ஓரளவு பாதிக்கப்படும் என்பது  உண்மையே! ஆனால் பெரிய பாதிப்பு என்பது அரசியல்வாதிகளுக்குத் தான்.

தமிழ் நாட்டில் தேர்தல் வருவதற்கு முன்னரே இப்படி ஒரு அதிரடி அறிவிப்பு வந்திருந்தால் ஒரு வேளை அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

ஆயிரம், ஐனூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிய வந்தபோது எனக்கு நடிகர்  மகாலிங்கம் நடித்த  பழைய  "நாம் இருவர்" படம் ஞாபகத்திற்கு வந்தது! அதில் "ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாதா?"  என்று -  நடிகர்  சாரங்கபாணி என்று நினைக்கிறேன் - மயங்கி விழுவது போல ஒரு காட்சி வரும்! சரியாக ஞாபகத்திற்குக் கொண்டு வர முடியவில்லை! என்னால்  உறுதியாகவும் சொல்ல முடியவில்லை! என்ன சொல்ல வருகிறேன் என்றால் அந்தக் காலத்திலேயே இந்தக் கறுப்புப் பணம் ஒரு பிரச்சனையாக இப்போதும் போல் இருந்திருக்கிறது! இப்போதோ அப்போது விட பல மடங்குகள் அதிகரித்துவிட்டன!

ஆனால் சமீபத்தில் வந்த "பிச்சைக்காரன்" படத்திலும் இப்படி ஒரு செய்தி சொல்லப்பட்டிருப்பது ஆச்சரியமான விஷயம்!  இந்திய நாட்டின்  வறுமையையும், கறுப்புப்பணத்தையும் ஒழிக்க படத்தின் இயக்குனர் சசி அமைத்திருந்த அந்த  வசனம் இப்போது உண்மையாகிவிட்டது! ஆக, நமது சினிமாப் படங்களும் அவ்வப்போது சில செய்திகளை முன்கூட்டியே சொல்லிவிடுகின்றன. "சுனாமி" பற்றி நடிகர் கமலஹாசன் தனது அன்பே சிவம் படத்திலும் அப்படித்தான் சொல்லியிருந்தார்!

சரி! பிரதமர் மோடி கொடுத்த இந்த அதிரடி அறிவிப்பினால் யாருக்கு பலத்த அடி?  தீவிரவாதிகள், கறுப்புப்பணம் வைத்திருப்போர், ஊழல்வாதிகள்,
 லஞ்சம் வாங்குவோர்  இவர்களுக்கெல்லாம் சரியான அடி விழும்!  சரியான முறையில் அனைத்தையும் கடைப்பிடித்தால் - அரசியல்வாதிகள் எதனையும் உடைத்தெறியக் கூடியவர்கள் -அமலாக்கம் சரியாக இருந்தால் - இந்த அதிரடி என்பது இந்தியாவைச் சரியானப் பாதைக்குக் கொண்டு செல்லும்.

இந்தியப் பிரதமர் மோடி தான் ஒரு துணிச்சல்வாதி  என்பதை நிருபித்திருக்கிறார். எந்த ஒர் அரசியல்வாதியும் செய்யத் துணியாததைச் செய்திருக்கிறார்! அவரது மாநிலமான, குஜாராத் மாநிலம், கறுப்புப் பணத்திற்குப் பெயர் போன மாநிலம்! அப்படியிருந்தும் இப்படி துணிச்சலோடு அவர் ஓர் அதிரடியைக் கொண்டு வந்ததற்கு அவரை நாம் பாராட்ட வேண்டும்!

மோடி அவர்கள் நல்லதைச் செய்திருக்கிறார்! பாராட்டுக்கள்!


No comments:

Post a Comment