Friday 18 November 2016

மோடி அதிரடி! மக்கள் அவதி!


மோடி அதிரடியான முடிவெடுத்தார்!  இப்போது மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் மூழ்கிருக்கின்ற்னர்! பல பிரச்சனைகள்; பல துயரங்கள்; பல இன்னல்கள். பல இறப்புக்கள்; பல துக்கங்கள் இன்னும் பல பல!

ஐனூறு ருபாய் நோட்டுக்களும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் செல்லாது என்று மோடி அறிவித்த அந்த நொடியிலிருந்து இதுவரை பல ஏழை எளிய மக்கள் மட்டும் அல்ல நடுத்தரக் குடும்பங்களும் பல வகைகளிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்!

நடுத்தர மக்கள் எப்படியோ ஏதோ சில வழிகளில் தப்பித்துக் கொள்ளுகின்றனர். அவர்களுக்கும் துன்பம் தான். ஆனால் அவர்கள்  எப்படியோ யாரையோ பிடித்து தங்களது காரியங்களைச் சாதித்துக் கொள்ளுகின்றனர்.

ஏழை மக்களின் துயரக்குகுரல் தான் நம்மையும் துயரத்தில் ஆழ்த்துகிறது.. திருமணம் நின்று போனது, இறந்தோரை அடக்கம் செய்ய முடியவில்லை, நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வழியில்லை, குழந்தைகளுக்கு உணவு தர முடியவில்லை என்று இப்படி ஏகப்பட்ட அவலக்குரல்; அழுகைக்குரல்.

மிகவும் வருத்தத்திற்கு உரியது தான். அதில் ஐயமில்லை. ஒன்று மட்டும் நமக்குப் புரிகிறது. நமது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிரமத்திற்கு உள்ளாகும் போது நாம் யாரும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை.  நமது சிரமத்தைபற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறோம். நமது பிரச்சனை ஒரு வேளை அவசரமில்லாத பிரச்சனையாக இருக்கலாம்.  நாளை செய்து கொள்ளலாம். அல்லது அதற்கு அடுத்த நாள் கூட  செய்து கொள்ளலாம். இந்த வேளையில் இப்போது யாருக்கு உதவி தேவைப் படுகிறதோ அவர்களுக்கு நாம் உதவ முன் வரவேண்டும். அப்படி உதவி செய்தவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை நாம் வாழ்த்துகிறோம். ஆனால் அப்படி உதவும் நிலையில் இருந்தும் உதவாதவர்கள் நிறையவே இருப்பார்கள்..அவர்களுக்காக நாம் வருந்தத்தான் வேண்டியிருக்கிறது.

ஆபத்து அவசர வேளைகளில் நாம் உதவத்தான் வேண்டும். அது நமது கடமை. சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர், பலத்தரபட்ட  மக்கள் நேரங்காலம் பாராமல்.தங்களால் முடிந்தவரை உதவினர். அரசியல்வாதிகள் தான் இதற்கு விதிவிலக்கு. மக்கள் மனிதாபிமானம் உள்ளவர்கள். இது பணம் சம்பந்தப்பட்டது என்பதால் மனிதாபிமானம் கொஞ்சம் விலகிப்போய்விட்டதாகாவே நாம் நினைக்க வேண்டியிருக்கிறது.

நாட்டின் மேம்பாட்டுக்காக சில நடவடிக்கைகள் எடுக்கும் போது பாதிப்புக்கள் வரத்தான் செய்யும். அதிலும் ஏழை மக்கள் பாதிக்கப்படும் போது நமக்கும் அது வருத்தத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் இந்தப் பிரச்சனைகள் எளிதாகக் களையப்பட வேண்டியவை. ஆனால் நம்மிடையே உள்ள அந்த அலட்சியம், ஏழை என்றால் இரக்க உணர்வு நம்மிடம் இல்லை.

மோடியின் இந்த நடவடிக்கையில்  சில குறைபாடுகள் இருக்கலாம். "இப்படித்தான் செய்யணுமா, அப்படிச் செய்யலாமே!" என்று குறை சொல்லுவதில் பயனில்லை! இப்போது அவர் இப்படித்தான் செய்திருக்கிறார்! இப்படியும் செய்யலாம் என்பது அவரின் நிலைப்பாடு.

இது வரையில் வந்த செய்திகளைப் பார்க்கும் போது பல கோடிகள்   வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன! இன்னும் வரும்!

இது வெற்றியா, தோல்வியா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

No comments:

Post a Comment