Wednesday 2 November 2016

அம்மா உணவகம்..!


அம்மா உணவகம் என்றால் தமிழ் நாட்டில் மிகவும் பிரபலம். அது அரசியல் உணவகம். நம் மலேசியாவில் காக்கா உணவகம் என்றால் மிகவும் பிரபலம்! நாம் அதனைக் "காக்காக் கடை" என்று செல்லமாக அழைப்போம்!

வெளிநாட்டு வாசர்களுக்கு:  காக்காவுக்கும் இந்த உணவகங்களுக்கும் சம்பந்தம் இல்லை.  இங்கு காக்கா என்று குறிப்பிடுவது கேரள நாட்டு முஸ்லிம்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதுவும் குறிப்பாக உணவகங்கள் நடத்தும் கேரள முஸ்லிம்களையே இது குறிக்கும்! இப்போது அது கொஞ்சம் கிளைவிட்டு உணவகங்கள் நடத்தும் தமிழ் முஸ்லிம்களையும்  பற்றிக் கொண்டது!

இப்போது இந்த கேரள முஸ்லிம்களின் கடைகள் நாடெங்கம் அதிகரித்து வருகின்றன. மூலை முடுக்குகள் எல்லாம் இவர்கள் உணவகங்களைத் திறக்கின்றனர். முதாளிகளும் கேரள முஸ்லிம்கள், வேலை செய்பவர்களும்  கேரள முஸ்லிம்கள்!

இவர்களின் முக்கிய வாடிக்கையாளர்களாக  உள் நாட்டு முஸ்லிம்களையே குறி வைக்கின்றனர். இப்போது இந்திய உணவு வகைகளையும் சேர்த்துக் கொண்டு இந்தியர்களையும் வளைத்துப் போடுகின்றனர்! ஆனால் சுத்தம் என்று வரும்போது இவர்கள் இன்னும் தங்களது இந்திய உணவகங்களின் மரபையே பின் பற்றுகின்றனர்! அதனால் உள்நாட்டு இந்தியர்களின் ஆதரவு என்பது கொஞ்சம் தள்ளியே நிற்கிறது!

ஆனால் நாம் இங்கு சொல்ல வேண்டிய செய்தி இதுவல்ல.  இவர்கள் உணவகங்கள் திறக்கிறார்கள். இவர்கள் அருகிலேயே மலாய்க்கார முஸ்லிம்களும் உணவகங்களை நடத்துகின்றார்கள்.  இந்தக் காக்காமார்களின் உணவகங்களோ 'ஓகோ' என்று நடைபெறுகின்றது. மலாய்க்கார உணவகங்களோ 'ஈகோ' என்று ஈ ஓட்டிக்கொண்Mடிருக்கிறது! இது எப்படி சாத்தியம்?

அப்படி ஒகோ என்று நடைபெறுகின்ற அளவுக்கு அங்கு எந்த விசேஷமும் இல்லை. ஆனால் அவர்களின் வியாபாரம் அசாதாரணமாக நடக்கிறது! அவர்களின் உணவகங்களின் விலையோ மற்ற உணவகங்களை விட விலை அதிகம்! அவர்கள் அரசாங்கம் சொல்லுகின்ற விலையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை! அவர்கள் வைத்தது தான் விலை. விலையோ கூடுதல்! ஆனால் அங்கு தான் மலாய்க்காரர்கள் அதிகம் கூடுகின்றனர்!

உண்மையைச் சொன்னால் அவர்களின் உணவகங்களில் விலை அதிகம். சுத்தம், சுகாதாரம் என்பதோ கொஞ்சம் கம்மி! பழைய சரக்குகளை வைத்தே சரிசெய்தல்! இப்படி பல்வகையான குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது உண்டு!

ஆனாலும் எல்லாக்காலங்களிலும்  அவர்கள் வியாபாரங்கள் குறைவதில்லை! ஏறுமுகமாகவே உள்ளன!

இது பற்றி எனது முஸ்லிம் நண்பர் - அவரும் காக்கா தான், உணவகமும் உண்டு -  அவருடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு தகவலைச் சொன்னார்: இந்தக் காக்காமார்களெல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கேரளா போவார்கள். அங்கு போய் தங்களது வியாபாரம் பெரிய அளவில் பெருக வேண்டும் என்பதற்காக 'மந்திரம்' செய்துவிட்டு வருவார்கள்! அதனால் தான் அவர்களின் வியாபார நிலையங்களில் கூட்டம் குறைவதில்லை! என்பதாக அவர் குறிப்பிட்டார்!

பொதுவாக நான் இது போன்ற 'மந்திர,தந்திர' செய்திகளை நம்புவதில்லை. ஆனால் சொன்னவரோ அவரும் அந்த கேரள காக்கா என்பதால் ஏதோ 'இருக்கலாம்!' என்று தலையாட்டியதோடு சரி! ஆனால் முழுமையாக நமபவில்லை!

ஆனாலும் நான் நம்புவதைப் பற்றி யார் கவலைப்பபட்டார்? காரியங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சமீபகாலங்களில் நடைபெறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது அது உண்மைதான் என்று தோன்றுகிறது! ஒருவர் கேரளா போகின்றார் என்றாலே கொஞ்சம் சந்தேகக்கண் கொண்டு தான் பார்க்க வேண்டியிருக்கிறது!

சரி! இந்த மந்திர வேலையெல்லாம் உணவகங்களுக்கு மட்டும் தானா? ஏன், மற்ற தொழில்களுக்குப் பயன்படுத்த முடியாதா? அப்படி ஒரு கேள்வி கேட்க நினைத்தாலும் இந்தக் காக்காமார்கள் எல்லாம் உணவுத்துறைக்கு  மட்டும் தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள்! நான் பார்த்தவரை இவர்கள் உணவகங்கள் மட்டுமே நடத்துகிறார்கள்!   வேறு துறைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை!

ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். அந்தக் காக்காமார்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களின் உழைப்பை நான் குறைவாகச் சொல்லமாட்டேன். நல்ல உழைப்பாளிகள்.24 மணி நேரமும் உழைக்கத் தயாராக இருப்பவர்கள். சரியான, கடுமையான உழைப்பு அவர்களிடம் உண்டு.அந்த உழைப்பை நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எங்கே போனாலும் ஒரு உணவகத்தைத்  திறந்து நடத்த வேண்டும் என்னும் அந்த மன உறுதி நமக்கும் வேண்டும். தொழில் தான் அவர்களின் குறிக்கோள். அது மிகவும் பாராட்டுக்குறியது.

அவர்களிடம் நேர்மைக்குறைவு உண்டு. தொழிலில் அது தேவை என்று அவர்கள் நினைக்கிறார்கள்! ஏமாற்றாமல் ஒரு தொழிலைச் செய்ய முடியாது என்பது அவர்களின் நிலைப்பாடு!

நாம் அவர்களைப்பின் பற்ற வேண்டும் என்னும் அவசியம் இல்லை. நாம் அவர்களின் உழைப்பை மட்டும் பார்ப்போம். தாங்கள் முன்னேற வேண்டும் என்னும் அவர்களின் துடிப்பு நமக்கும் வர வேண்டும். அது போதும்!

கேரள காக்காய்களிடமிருந்து நல்லதை நாம் எடுத்து கொள்ளுவோம்! முன்னேறும் வழியைப் பார்ப்போம்!








No comments:

Post a Comment