Thursday 28 May 2020

கொரோனாவின் பாதிப்பு!

நண்பர்களே!

நீண்ட நாள்களாக எழுத வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மன்னிக்கவும்.

கொரோனா தொற்று நோய் எப்படி உலகையே புரட்டிப் போட்டு விட்டதோ அப்படியே எனது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிட்டது! மார்ச் மாதம் 16ஆம் தேதிக்குப் பிறகு நானும் வீட்டிலேயே முடங்கிப் போய்விட்டேன்.பிறகு இம்மாதம் ஹரிராயா அன்று தான் வெளியே போய் வந்தேன். இப்போதும் அதே நிலைதான், வயதின் காரணமாக!

நான் ஒரு பெரும் தவறு செய்து விட்டேன். எனக்கு அலுவலகத்தில் கணினி உள்ளது. அதனால் வீட்டில் கணினி வைத்துக் கொள்ளவில்லை. இன்று தான் கணினியை வீட்டிற்குக் கொண்டு வந்தேன். அதனால் தான் உங்களைச் சந்திக்க இயலவில்லை. மன்னிக்கவும்.

நான் எப்போது வேலைக்குச் செல்ல முடியும் என்று சொல்ல முடியவிலை. காரணம் நான் தினசரி மக்களைப் பார்ப்பவன். அது சரியாக வராது என்பதால் வீட்டோடு அடங்கிக் கிடக்கிறேன்!

அறுபது ஆண்டு காலம் வேலை செய்தவன். இனியும் தொடருவேன். காத்துக் கிடக்கிறேன்.

வெகு விரைவில் கொரோனா தொற்று நோயிலிருந்து இந்த உலகம் விடுபடும். நமது நாடும் விடுபடும். 

மீண்டும் பழையபடி அனைத்தும் செயல்பட இறைவனை இறைஞ்சுவோம்!


No comments:

Post a Comment