Monday 22 August 2016

கபாலி ஏன் கால் மேல் கால் போட்டு .......?


கபாலி படத்தில் நம் மலேசியத் தமிழர்களுக்குப் புரியாத சில விஷயங்களைப் புகுத்தியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். அது ஒன்றும் நமக்குப் புதிய விஷயங்கள் அல்ல.ஆனால் அது தமிழ் நாட்டில் அதனை ஒரு பிரச்சனையாகக் காண்போரும் உண்டு என்பதை அது பற்றியான விவாதங்கள் நடபெறும் போது தான் நமக்கு அது புரிகிறது!

கபாலி படத்தில் ரஜினி,  கால் மேல் கால் போட்டு உட்காருவதும், கோட் சூட்டோடு அவர் நடமாடுவதும்  ஏதோ  ஒர் அதிசயமாக தமிழ் நாட்டில் பேசப் படுகிறது!  நமது நாட்டைப் பொருத்தவரை இது நமக்குப் புதிது அல்ல. இது ஒரு சாதாரண விஷயமாகத்தான் நாம் பார்க்கிறோம்.  தேவை என்று வரும் போது கோட் சூட் அணிவது நமக்குப் புதிது அல்ல.

கால் மேல் கால் போட்டு உட்காருவதில் அரசியல் உண்டு என்பதை கபாலி படத்தைப் பிறகு தான் நமக்கே புரிகிறது! உடை அணிவதிலும் அரசியல் உண்டு என்பதையும் நமக்கு இப்போது தான் இயக்குனர் வெளிப்படுத்தியிருக்கிறார்!

அடாடா! தமிழக மக்கள்  எதிலெல்லாம் அரசியலை நுழைத்திருக்கிறார்கள்!

இன்னொருவன் சொல்லித்தானா நமது உடைகளை நாம் தேர்வு செய்ய வேண்டும்! கால் மேல் கால் போட்டு உட்காருவது என்பது இயற்கையாக வருவது! அதிலுமா அரசியல்!

ஓர் அதிர்ச்சியான தகவலையும் இந்த நேரத்தில் நமது மலேசிய வாசகர்ளுக்குத் தெரியப்படுத்துவது எனது கடமை என நினைக்கிறேன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய போராளி ஒருவர் - இம்மானுவேல் சேகர் என்பவர் -  ஒரு கூட்டத்திற்கு அவர் நல்ல உடை அணிந்து வந்தார் என்பதற்காகவும், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் என்பதற்காகவும் அவர் கொலை செய்யப்பபட்டார் என அறியும் போது நம்மால் அதனை ஏற்றுக்கொள்ளத் தான்  முடியவில்லை! என்ன ஒரு காட்டுமிராண்டித்தனம்! மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாதவர்கள் இருந்தால் என்ன, செத்தால் என்ன?

உண்மைமைச் சொன்னால் கபாலி மூலம் இன்னும் பல செய்திகள் ஒவ்வொன்றாக நமக்குக்  கிடைக்கும் என நம்பலாம். கிடைக்க வேண்டும். இந்தப் படத்தின் மூலம் பல செய்திகளை வெளிக் கொணர்ந்திருக்கும் இயக்குனர் ரஞ்சித்தை நாம் பாராட்ட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக கபாலியாக நடித்த ரஜினியை நாம் பராட்டியே ஆக வேண்டும்! வேறு யாரும்  நடிக்கத் துணியாத ஒரு வேடத்தில் அவர் நடித்திருக்கிறார்!

இயக்குனர் ரஞ்சித்துக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் நமது வாழ்த்துகள்!

No comments:

Post a Comment