பள்ளியில் நாங்கள் பேனாக்களைப் பயன்படுத்த ஆரம்பித்த போது மையைப் பேனாக்களில் தொட்டுத்தொட்டு எழுத வேண்டும். இது தான் ஆரம்பம். அடுத்த கட்டம் தான் மை நிரப்பிய பேனாக்கள். (Fountain Pen) இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் எப்படியாவது சட்டையில் மை கொட்டிவிடும்.
அதன் பின்னர் பலவித பேனாக்கள். அப்போது பேனாக்களில் நமது பெயரைப் பொறிப்பது ஓர் அற்ப சந்தோஷம். அதாவது நான் பைலட் (Pilot) பேனா வைத்திருந்தேன். உடனே என்னுடைய பெயரை அதில் பொறிப்பது! அப்போதைய மாணவரிடேயே இருந்த வழக்கம். எவனும் திருடப்போவதில்லை. என்ன செய்ய, கூட்டத்தோடு கோவிந்தா! அவ்வளவு தான்! சீனர்களின் வியாபார யுக்தியே யுக்தி!
பெரும்பாலும் முதலாம் படிவம் வந்துவிட்டாலே சாதாரண புத்தகப் பைகளைப் (தோளில் தொங்கும்) பயன்படுத்த முடியாது. புத்தகங்கள் அதிகரிக்கும் போது இந்த வகையான ரோத்தான் பைகள்தான் தேவைப்படும். எல்லா மாணவர்களும் இந்தப்பைகளைப் பயன்படுத்தித் தான் புத்தகங்களைக் கொண்டு போக வேண்டும். நீங்கள் இடைநிலைப்பள்ளிகளில் பயில்கிறீர்கள் என்பதற்கு இது தான் அடையாளம்! நீண்ட சிலுவார் அணிவதும் இப்போது தான். மழை காலத்திற்கெல்லாம் புத்தகங்கள் நனையாமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு.
அறிவோம்: உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக் கூடிய மிக சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி.
நெல்சன் மண்டேலா
No comments:
Post a Comment