Tuesday, 4 March 2025

செனவாங் தோட்டம் (15)



மூனாங் கட்டையில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவது அவசியம். வானொலியில் நேயர் விருப்பம் என்பது அந்தக் காலகட்டத்திலும் இருக்கத்தான் செய்தது.  எனது  நண்பரின் தந்தையார்  எம்.கே.தியாகராஜபாகவதரின் தீவிர இரசிகர்.  அவர் பாகதவர் பாடிய "பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்"  பாடலை  கேட்க ஆசை.  அவர் ஓரு கடுதாசியை எடுத்துக்கொண்டு, வீடு வீடாகச் சென்று "இந்தப் பாடல் உங்களுக்கு விருப்பமா?" என்று கேட்டுக் கொண்டு வந்தார்! பாவம் அப்பாவி மனிதர்! பின்னர் அவர் எத்தனை நேயர்கள் கேட்டார்கள் என்கிற பட்டியலை அனுப்பி வைத்ததாக அவரின் மகன் என்னிடம் சொன்னார்! அப்போது எங்களிடம் வானோலி பெட்டி இல்லை. அதனால்  அவரின்  ஆசை நிறைவேறியதா என்பது தெரியவில்லை.

ஏறக்குறைய எனதுபதினைந்தாவது வயதில்  எனது குடும்பம் செனவாங் தோட்டத்திற்கு மாறியது. எல்லாம் எனது கல்வியின் பொருட்டு தான்.  இது பள்ளி போக வசதியான இடம்.  எனது வயது ஒத்த நண்பர்களும்  இருந்தனர். 

இது ஒரு வேறொரு உலகம்.  கல்விக்கு யாரும் பயன்படவில்லை. சினிமா பத்திரிக்கைகள், துப்பறியும் கதைகள் - இவைகள் தான் முதலிடம். அத்தனை சினிமா இத்ழ்களையும், துப்பறியும் கதைகளையும் படித்திருக்கிறேன்.  அத்தோடு திராவிட இதழ்கள்.  கவனச் சிதறல்கள் அதிகம். 

என் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் யாரும் இல்லை.  கல்வியில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் இந்த தோட்டாமே என் கண்ணைத் திறந்தது என்று சொல்லலாம். கொஞ்சம் பொது அறிவு கிடைத்தது. என்னிடம் எனது கம்போங்  எது என்று கேட்டால் அது செனவாங் தோட்டம் என்று தான் சொல்லுவேன். அது தான் இன்றளவும் வேரூன்றி விட்டது.


அறிவோம்:  நமது உடம்பில் உடைக்கமுடியாத  எலும்பு எதுவென்று தெரியுமா? எது எதுவோ ஞாபகத்திற்கு வரும். ஆனால் அந்த எலும்பு மட்டும் ஞாபகத்திற்கு வராது.   அது தான் நமது தாடை எலும்பு. நமது உடலில் உடைக்க முடியாத மிக உறுதியான  எலும்புகளில் அதுவும் ஒன்று என்று சொல்லப்படுகிறது.


No comments:

Post a Comment