Thursday, 13 March 2025

காணாமற் போன பள்ளிகள்! (19)

 

                 சீக்கியர்களின் கோயிலானா, குருத்துவாரா, சிரம்பான் (2024)

சிரம்பான் பட்டணத்தில்  நுழையும் போதே  பள்ளிக்கூடங்களாகவே இருக்கும்.

நான் படித்த செயின்போல் பள்ளி அதற்கு மேல் குருத்துவாராவில் பஞ்சாப் மொழி பள்ளிக்கூடம்,  ஜாவா லேன் தமிழ்ப்பள்ளிக்கூடம் இந்தப் பக்கம்  கிறிஸ்துவ கன்னியர்களால் நடத்தப்பட்ட கான்வெண்ட் ஆங்கிலப்பள்ளி, தமிழ்ப்பள்ளி, கொஞசம் தள்ளிப்போனால் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி,  இன்னும் கொஞ்சம் தள்ளி ஆங்கிலோ சைனீஸ் ஆங்கிலப்பள்ளி (ACS)  - இப்படி பள்ளிகளாகவே இருந்தன.

இன்றைய நிலை என்ன? நான் படித்த பள்ளியை இடித்துவிட்டு  Wisma Punca Mas  என்கிற மாபெரும் கட்டிடத்தைக்கட்டி இப்போது அது  பாழடைந்து கிடக்கிறது! குருத்துவாராவில் பஞ்சாப் பள்ளிக்கூடம் போதுமான ஆதரவு இல்லாமல்  அப்போதே  மூடப்பட்டு விட்டது. கான்வென் பள்ளி  இப்போது  மரண குளமாக  மாறிவிட்டது! விவேகானந்தா தமிழ்ப்பள்ளி இலங்கைத் தமிழர்களின்  வெறுப்புக்கு ஆளாகி  அவர்கள் கல்யாண மண்டபமாக  மாற்றி விட்டனர்! இங்கு மட்டும அல்ல மலேசியாவில் அவர்கள் நடத்திய அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளையும் மூடிவிட்டனர்! என்ன வெறுப்போ?

சிரம்பான் பட்டணத்திற்குள்  நுழையும் போதே KGV பள்ளிக்கூடமும்  ரயில்வே ஸ்டேஷனும்  தவிர்க்க முடியாதவை. அன்றைய ரயில்வே  ஸ்டேஷனில் மணிக்கூண்டும் இருக்கும். சிரம்பான் பட்டணத்தில்  நேரத்தைப் பார்க்க  அது ஒன்று தான் அடையாளம்.  காலை நேரத்தில் பள்ளிக்கூடம் போவதற்கு முன்  நேரம் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது. அப்போது கைக்கடிகாரம் எந்த மாணவனிடமும்  இருப்பதற்கான வாய்ப்பில்லை. இப்போது மணிக்கூண்டு இருந்ததற்கான  அடையாளமே இல்லை. காரணம் கைக்கடிகாரம் கட்டாத கைகளே இப்போது இல்லை!



அறிவோம்: "உன்னால் முடியாது என்று சொல்வதை வேறுயாரோ ஒருவர் செய்து கொண்டுதான் இருக்கிறார். உன்னால் முடியாது என்றால் வேறு யாராலும் முடியாது.  வேறு யாராலும் முடியாது என்றால் உன்னால் மட்டுமே முடியும்."

பேராசிரியை பர்வீன் சுல்தானா


No comments:

Post a Comment