Saturday, 24 May 2025

சங்கிலியோடு பணப்பையை ......! (37)

அது ஒரு காலம் என்பார்கள்.  எது, எதற்கு, என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்று  புரியாத புதிர்.  என்னவோ எல்லாரும் செய்கிறார்கள்  நாமும் செய்கிறோம்! அதைத் தவிர சொல்ல வேறொன்றுமில்லை!

எங்கள் பள்ளி காலத்தில் இதுவும் நடந்திருக்கிறது. பணம் வைத்திருக்கும் பர்சில் (Purse)  பெரிதாக ஒன்றும் இருக்காது. ஆனால் என்னவோ ஆயிரக்கணக்கில் பணம் இருப்பது போல  பணப்பையை ஒரு சங்கலியோடு இணைத்து  பத்திரமாக, டிகபாதுகாப்பாக  பிண்ணி வைத்திருப்போம்!  அப்படிக் கொஞ்சம் நாள், உண்மையைச் சொன்னால், ஸ்டைல் காட்டினோம்!  அப்புறம் ஒரிரு ஆண்டுகளில்  அந்தப் பழக்கம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது!

இப்போதும் ஒரு சிலர் அதனைப் பயன்படுத்தித்தான்  வருகின்றனர். பெரும்பாலும் அது வெளிநாட்டவர் என நினைக்கிறேன்.

எல்லா புதுமைகளையும் விரும்புபவர்கள் இளைஞர்கள். எல்லாம் மாணவ பருவத்திலிருந்தே ஆரம்பித்துவிடுகின்றன. இன்னொரு புதுமையும் உண்டு. பார்ப்போம்.



அறிவோம்: பி.கே.ஆர். தேர்தலில் பிரதமரின் மகள்  நூருல் இஸா கட்சியின் தேர்தலில்  துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அவருக்கு வாழ்த்துச் சொல்வதில் நம் சமுதாயத்திற்கு என்ன ஆகப் போகிறது?

No comments:

Post a Comment