Monday, 26 May 2025

பூ போட்ட சட்டைகள்! (39)

பு
பூ போட்ட சட்டைகளை அணிவது என்பது எந்தக் காலத்தில் ஆரம்பானது?  அப்போது எல்லாம்  'பாத்தேக்'  என்கிற வார்த்தையே நடப்பில் இல்லை என்பது தான் உண்மை. ஏறக்குறைய 1959/1960 - ம் ஆண்டுகளில் தான் இந்த ஆடைகள் பொது மக்களின் பார்வைக்கு வந்தன  என்பது எனது கணிப்பு.

பூ போட்ட  சட்டகளை அணிவது எங்கிருந்து வந்த கலாச்சாரம் என்பது தெரியவில்லை. நான் நினைப்பது 'ஹாவாய்" தீவின் கலாச்சாரமாக இருக்கலாம். ஆனால் அது அன்றைய ஹிப்பிகளால் பிரபலப்படுத்தப்பட்ட  ஒரு கலாச்சாரம் என்பதாக சில குறிப்புகள் கூறுகின்றன.

பூ போட்ட சட்டைகளை அணிந்த அந்த ஆரம்பகாலத்தில்  -  அணிபவர்களை நோக்கி வெவ்வேறு வகையில் வசைகள் பாடப்பட்டன. அகராதி, அடியாள்,  கேங்ஸ்டர்..... .இப்படியாக  பலப்பல ஏச்சும் பேச்சும்!  என்னைப் பொறுத்தவரை அது பெண்கள் அணியும் சட்டை என்பதாகவே மனதில் பட்டது. நான் அணிவதில்லை.

எனது நண்பர் இராமன் என்பவர் எதுபற்றியும் கவலைபடாத மனிதர். எனக்குத் தெரிந்து  அவர் தான் முதன் முதலாக இது போன்ற சட்டைகளை, செனவாங் தோட்டத்தில்,  அணிய ஆரம்பித்தவர்.  ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர்  இந்த சட்டைகள் சூடு பிடிக்க  ஆரம்பித்தன. 

அதன் பின்னர் தான் பாத்தேக் பிரபலப்படுத்தப்பட்டது.  அதன் விற்பனையை அதிகரிக்க வாரம் ஒரு முறை  பாத்தேக் அணியுங்கள் என்று பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டன.

ஒன்றை நினவுபடுத்துகிறேன். ஆரம்பகாலத்தில்  இதன் விற்பனையில்  நமது இளைஞர்களின் பங்கு அதிகம் என்பதில்   சந்தேகம் வேண்டாம். நாம்  தான் வழக்கம் போல இதன் முன்னோடி!


அறிவோம்:   தமிழர்கள் எப்போது  மேற்சட்டைகள் போட ஆரம்பித்தார்கள்? இன்றைய சட்டைகள் போன்று இல்லாது  அவ்வப்போதைய  நாகரிகத்திற்கு ஏற்றவாறு அவர்களும் அணிந்திருக்கிறார்கள்.  எழுத்தாளர் கல்கியின் 'பொன்னியின் செல்வனில்'  இதனைப் பார்க்கலாம். அப்படிப் பார்த்தால் நீண்டகாலம்  என்று சொல்லுவதைத் தவிர வேறு வார்த்தை இல்லை!

No comments:

Post a Comment