Friday, 3 May 2024

வெறும் வார்த்தைகள் போதா!

 

அசியல்வாதிகளின் ஏமாற்று வேலைகளுக்கு அளவே இல்லையா? அதைத்தான் கேட்கிறோம் இந்த இடைத்தேர்தலில்!  அதனை ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் உருட்டல்களை நம்பித்தான் வாக்குகள் அளிக்கிறோம். பதவிக்கு வந்தவுடன்  அவன் மேலே போகிறான்  நாம் கீழே போய்விடுகிறோம்!

அது பற்றி நமக்குக் கவலையில்லை.  அவனுக்கு இருக்கிற அதே உரிமை நமக்கும் இருக்கிறது.  சில தேசிய பிரச்சனைகளைப் பற்றி நாம் பேசப்போவதில்லை.  ஆனால் அந்தத் தொகுதி மக்கள்  ஏமற்றப்பட்டிருக்கிறார்களே  அது பற்றி நாம் பேசித்தான் ஆக வேண்டும். 

அந்தத் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜ.செ.கட்சியைச் சேர்ந்தவர்.  மூன்று தவணைகள்  சட்டமன்ற உறுப்பினராக இருந்தும்  அவர் அங்கு நிலவிய வீடமைப்புத் திட்டத்திற்கு  ஆதரவு தரவுமில்லை; முடிவுக்குக் கொண்டு வரவுமில்லை.  அதனால் தான் இது நாள் வரை இத்தனை இழுத்தடிப்புகள்.  இழுத்தடிப்பு என்றால் ஜ.செ.க. செயல்படவில்லை என்பது தான் பொருள். 

என்ன காரணமாக இருக்கும்?  வெளிப்படையாக நமக்குத் தெரியவில்லை. மேலோட்டமாகப் பார்க்கும் போது  நிலம் சீனர்களுடையது வீடுகள் இந்தியர்களுக்கானது - என்று தான் இருக்க வேண்டும். அது தான் மலேசிய சூழல்.  சீனர்கள் என்னும் போது ஜ.செ.கட்சி செயல்படாது என்பது நமக்குத் தெரியும்.  இந்தியர்களுக்கு என்றால் ஜ.செ.க. அலட்சியம் காட்டத்தான் செய்யும்!  அது தான் அவர்களது வாடிக்கை!

அதனால் தான் அங்குள்ள இந்தியர்கள் போர்க்கொடி தூக்குகின்றனர். வீடமைப்புப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு இல்லையென்றால்  "எங்கள் வாக்கு எதிர்கட்சியினருக்கே!"  என்கிற கோஷம் சரியானது தான்!

அரசாங்கம் நமது உரிமைகளுக்கு மரியாதை தரவேண்டும். கல்வி, வர்த்தகம் என்பதெல்லாம் வெறும் பேச்சளவில் தான். அது தேசியப் பிரச்சனை.  நமக்கு இந்தத் தொகுதியே இப்போதைய பிரச்சனை. கோலகுபுபாரு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். கிடைக்கும் என்கிற உறுதிமொழி இருந்தால் பக்காத்தானுக்குத் தாராளமாக வாக்களிக்கலாம்.

Thursday, 2 May 2024

அவதூறுகளைப் பரப்ப வேண்டாம்!

 

பொதுவாக இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு  அமைச்சர் பதவி  கிடைத்திருப்பது,  அது இப்போது தான் நடந்திருக்கிறது. அதுவும் பிரதமர் அன்வார் காலத்தில் நடந்திருப்பது  மேலும் விசேஷம் என்று தான் சொல்ல வேண்டும்.

பிரதமர் அன்வார் பற்றி பலவேறு கருத்துகள் நமக்கு இருந்தாலும்  அவருடைய அமைச்சரவையில்  ஒரு  தமிழ் பெண்ணுக்கு இடம் கொடுத்திருக்கிறாரே அதனை நாம் பாராட்டியே ஆக வேண்டும். 

ஆனால் பிரச்சனை என்னவென்றால் பிரதமரின் இந்த முடிவை அவருடைய கட்சியின், அல்லது ஒற்றுமை அரசாங்கத்தின் இந்தியத் தலைவர்களே  அவருக்கு ஆதரவு கொடுக்க மறுக்கிறார்கள் என்பது தான்! அதனை நாம் சமீபத்தில் கண்டோம்.  ஆமாம், மித்ரா அமைப்பை பிரதமர் துறைக்கு மாற்ற வேண்டும் என்பதில் ஏன் அத்தனை வன்மம்? அத்தனை பேரும் மாற்றியே ஆக வேண்டும் என்று பொர்க்கொடி தூக்கினார்கள்,  எதனால்?  "எங்களுக்குத் துணை அமைச்சர் மேல் நம்பிக்கையில்லை!"  என்கிற  ஆவேசம்  தானே! இவர் ஒரு பெண், இவரால் என்ன செய்ய முடியும்? என்கிற வயிற்றெரிசல்  ஒருபுறம்!  ஒரு தமிழ் பெண் என்றால்  உங்களுக்கு எவ்வளவு இளக்காரம் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.  சீன, மலாய் பெண்கள் என்றால் காலில் விழத்தயார்! ஒன்றை நினைவில் வையுங்கள்.  உங்களைவிட அவர் எந்த வகையிலும் தகுதியில் முறைந்தவர் அல்ல.

ஒற்றுமைத் துறையிலிருந்து  பிரதமர் துறைக்கு மித்ராவை மாற்றியது  பிரதமரின் அதிகாரத்திற்கு உட்பட்டது.  அதனை மாற்றுவதற்கு நீங்கள் காட்டிய முனைப்பு 'ஹின்ராப்' முனைப்பு என்று சொல்லலாமா?    அதனையே இன்று இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு  அந்த முனைப்பைக் காட்டியிருந்தால் இன்று பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்குமே!  ஒரு பெண் என்பதால்  அவ்வளவு தீவிரம் காட்டினீர்கள்!  ஏன் இப்போது நம் கண்முன்னே உள்ள பிரச்சனைகளுக்கும் அதே தீவிரத்தைக் காட்டுங்களேன்!  சும்மா வெத்து வேட்டுகள் என்று தான் உங்களைப்பற்றி நான் சொல்லுவேன்!

இப்போதும்  அவரைப்பற்றி புரளி கிளப்புகிறீர்கள் என்பது நமக்குத் தெரிகிறது.  உங்கள் வேலையை நீங்கள் பார்த்தாலே போதுமானது. யாருக்கும் புண்ணியமில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பது நமக்கும் விளங்குகிறது.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.  நீங்கள் தேர்தலுக்குப் போகும் போது உங்கள் சேவை தான் முன் நிறுத்தப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.  ஒரு பெண் அமைச்சரை உங்களுக்கு மதிக்கத் தெரியவில்லை என்றால்  வேறு யாரை மதிக்கப் போகிறீர்கள்?