"லோக்மான் சார்! வாயை மூடுறிங்களா?" : ம்.இ.கா: தினாளன் ராஜகோபாலு!
அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் கொஞ்சம் வாய் பிரபலம்!
அம்னோ ஆட்சியில் இருந்தால் வாய்க்கொழுப்பை கொஞ்சம் அதிகமாகவே காட்டலாம். அவரை எதிர்க்க ஆளில்லை. எல்லை மீறீனாலும் யாரும் பிரச்சனைப் பண்ண போவதில்லை! எல்லாம் அவர்களின் ஆட்சி! அத்து மீறலாம்!
ஆனால் இன்றைய நிலைமை வேறு. தேசிய முன்னணியில் உள்ள மூன்று கட்சிகளுமே அம்னோ, ம.சீ.ச., ம.இ.கா.மக்களின் செல்வாக்கை இழந்த கட்சிகளாக இருக்கின்றன என்பதை லோக்மான் அறியமாட்டாரோ! ஆனால் அவர் அடிக்கடி அதனை மறந்து விடுகிறார் என்பது தான் அவரது பிரச்சனை. அவரது நிலைமையை மறந்து மற்ற கட்சிகளைப் பாரமாக நினைக்கின்றார்! அம்னோ எப்படி மலாய்க்காரர்களின் அதரவைப் பெறவில்லையோ அதே போல மற்ற இரண்டு கட்சிகளுமே சீனர்களின், இந்தியர்களின் ஆதரவை இழந்துவிட்டன.
நாட்டின் முப்பெரும் இனங்களும் தேசிய முன்னணியைப் புறக்கணித்துவிட்டன. யார் காரணம்? லோக்மான் அறியமாட்டாரோ? அம்னோ செய்த ஊழல்கள் தான் அனைத்து மலேசியர்களையும் தேசிய முன்னணியின் மேல் வெறுப்பை ஏற்படுத்திவிட்டன! முன்னாள் பிரதமர் நஜிப்-ரோஸ்மா கூட்டணி நாட்டுக்குச் செய்த துரோகம் என்ன சாதாரணமானதா? அவரே ஆட்சியில் இருந்திருந்தால் அம்னோ நாட்டையே வேறொறு நாட்டிற்கு எழுதி கொடுத்திருப்பார்!
லோக்மான் ஒன்றை உணர வேண்டும். மூன்று கட்சிகளையும் தராசில் வைத்தால் மக்களின் செல்வாக்கு என்பது ஒரே அளவையைத்தான் காட்டும்! அம்னோ அப்படி ஒன்றும் பெருமைப்படும் அளவுக்கு ஏதையும் சாதித்துவிடவில்லை! 178 நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டு வெறும் 30 இடங்களில் வெற்றி பெற்றதில் என்ன பெருமை?
ஆகவே தோல்வி என்பது மூன்று கட்சிகளுக்குமே பெரும் தோல்வி தான். இதில் என்ன நாட்டாமை உங்களுக்கு? ம.இ.கா. பெற்ற தோல்விக்கு அம்னோ தான் காரணம்? இப்போது என்னவோ உங்கள் பேச்சு அளவுக்கு மீறுகிறதே? அப்படி என்ன நீங்கள் சாதித்துவிட்டீர்கள் அவர்கள் சாதிக்கவில்லை?
ம.இ.கா.வின் தகவல் பிரிவு தலைவர் தினாளன் ரஜகோபாலு சொன்னது சரிதான்: "கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்!" அது தான் லோக்மானுக்கான சரியான பதிலடி!
No comments:
Post a Comment