Showing posts with label கோடிஸ்வரர். Show all posts
Showing posts with label கோடிஸ்வரர். Show all posts

Friday, 14 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (55)

சீனர் சமூகமே நமக்கு எடுத்துக்காட்டு  (i)

நாம் மலேசியர்கள். நம் நாட்டில் பெரும் பணக்காரர்கள் என்று வரும்  போது  யார் நம் கண் முன்னே வருவர்?

எல்லா இனத்தவரிலும் பணக்காரர்கள் உண்டு.  சீனர், இந்தியர், மலாய்க்காரர் அனைவரிலும் உண்டு.  ஆனால் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் எங்கே போகிறோம்?  எத்தனை கடைகள் இருந்தாலும் கடைசியில் சீனர் கடைகளுக்குத் தான் போகிறோம்! இந்தியர் கடைகள் ஐந்து இருந்தால் சீனர் கடைகள் ஐநூறு இருக்கும் போது நாம் இயல்பாகவே சீனர்களை நாடித்தான் செல்ல வேண்டிய சூழல்!

சீனர்கள் எல்லா விதத் தொழில்களிலும் இருக்கின்றனர். சிறிய, நடுத்தர, பெரிய - இப்படி அனைத்துத் தொழில்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர். அதனால் தான் பொருளாதாரம் என்னும் போது அனைத்தும் அவர்கள் கையில் இருப்பதால் இயல்பாகவே அவர்கள் தான் முன்னணியின் நிற்கின்றனர்.

அன்று சிறிய தொழில்களைச் செய்தவர்களின் வீட்டுப் பிள்ளைகள் இன்று அவைகளைப்  பெரிய தொழில்களாக மாற்றிவிட்டனர்!  எல்லாருமே சிறிய தொழில்களிலருந்து தான் வர வேண்டும். யாரும் விதிவிலக்கல்ல!

சிறிய தொழில்களிலும்,  நடுத்தர தொழில்களிலும் ஈடுபாடு காட்டினால் தான் பெரிய  தொழில்களுக்குப் போக முடியும். அது தான் பரிணாம வளர்ச்சி என்பது. எடுத்த எடுப்பில் பெரிய தொழில்களில் குதித்து விட முடியாது. அது சாத்தியமுமில்லை. வாய்ப்புமில்லை.

இன்று நாட்டின் பொருளாதார சக்தி என்பது சீனர்களின் கையில் தான். எல்லாத் தொழில்களையும் அவர்கள் தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர்!  அவர்களிடம் பொருள்களை வாங்கித்தான் மற்ற இனத்தவர் தொழில் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. அதனை அப்படி ஒன்றும் எளிதில் மாற்றி விட முடியாது. அவர்களும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை!  அது அவர்களின் கடும் உழைப்பால் நேர்ந்தது. 

நாம், குறிப்பாக தமிழர்கள், சீனர்களிடமிருந்து படிக்க வேண்டியது நிறையவே உள்ளது.  அதுவும் தொழில் ஈடுபாடு வேண்டுமென்றால் நாம் சீனர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தாலே போதும். நாம் தலைநிமிர்ந்து வாழலாம்.

Monday, 20 June 2016

நீங்களும் தலைவர் தான்!


நாம் யார் யாரையோ தலைவர் ஏன்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்படியென்றால் நாம் என்ன, வாலாட்டும் நாய்களா?

இப்போதெல்லாம் யார் தலைவர், யார் தலைவர் என்று கேள்விகள் நிறையவே கேட்க ஆரம்பித்து விட்டோம்.

அவசியம் இல்லை1 எந்தத் தலைவனும் நமக்கு அவசியம் இல்லை; தேவையும் இல்லை! நமக்கு நாமே தான் தலைவர்!

இது நாள் வரை நமக்கு வாய்த்த தலைவர்ககள் எல்லாம் ஏமாற்றுப் பேர்வழிகள்! யாராவது ஒருவரை நம்மால் கறைபடாத காமராசர் என்று சொல்ல முடியுமா?

யார் யாரையோ ஏமாற்றுகிறார்கள். நமக்கு மிகவும் ஏமாற்றம் தருவது தமிழ்பள்ளிகளுக்காக அரசாங்கம் கொடுக்கின்ற கோடிக்கணக்கான மானியங்கள்,  சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குப் போய் சேரவில்லை என்பது தான் மிகப்பெரிய வருத்தம்.

இப்படிக் கல்விக் கூடங்களுக்குப் போய் சேர வேண்டிய பணத்தை ஏமாற்றித்திரியும் இந்தத் தலைவர்களின் வீட்டுப்பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? கல்வி இவர்களுக்குப் போய்ச் சேருமா?

முதலில் இந்தத் தலைவர்களை நம்புகின்ற போக்கை நாம்  கைவிட வேண்டும். அவர்களிடம் போய் தொங்குகின்ற போக்கை நாம் உதற வேண்டும்.நாம் தலைவர்கள் என்று கம்பிரமாகத் தலை நிமிர்ந்து  நிற்க வேண்டும்.. தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை நாம் அதிகமாகவே கூனிக்குறுகி வணங்கிவிட்டோம்!

சீன சமுகத்தைப் பார்க்கிறோமே அவர்கள் என்ன அவர்கள் தலைவர்களைப் பார்த்ததும் கூனிக்குறுகியா நிற்கிறார்கள்? நமக்குச் சேவை செய்ய வேண்டியவர்களைப் பார்த்து நாம் ஏன் கூனிக்குறுக வேண்டும்? அதற்கான காரணம் என்ன? பொருளாதார பலம் இல்லை என்கிற ஒரே காரணம் தானே நம்மை அப்படிக் கூனிக்குறுக வைக்கிறது!

பொருளாதாரப் பலத்தை நாம் பெருக்கிக்கொள்ள வேண்டுமே தவிர, கண்டவன் கை கால்களைப் பிடித்து நாம் முன்னேற  வேண்டும் என நினைப்பது தவறு! நமது சுயமரியாதையை நாம் எந்த நிலையிலும்  அடகு வைத்துவிடக் கூடாது!

முன்னேற வேண்டும். பொருளாதாரப் பலத்தோடு வாழ வேண்டும். தலைநிமிர்ந்து நடக்க வேண்டும்..நானும் தன்மான உள்ளத் தமிழன் தான். நானும் தலைவன்  தான். நான் ஏன் யாருக்கோ, எவனுக்கோ கூனிக்குறுக வேண்டும்?

கையில் பணம் இல்லை இன்றால் நாம் எந்நாளும் தொண்டனாகத்தான் இருக்க வேண்டும். தலைவனிடன் கூனிக்குறுக வேண்டும்! யாரைப் பார்த்தாலும் கூனிக்குறுக வேண்டும்.

கை நிறைய பணம் உள்ளவனை அவ்வளவு சீக்கிரத்தில் நாம் அசைத்துவிட முடியாது. அதனால் தான் சீனர்களை யாராலும் கைவைக்க முடிகிறதா, பாருங்கள். நமது சமூகத்தினருக்கு எவ்வளவு பிரச்சனைகள்.

காலையில் கோவிலுக்குப் போக வேண்டும் என்றால் கோவில்களிள் உள்ள  சிலைகள் உடைந்து கிடக்கின்றன. பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்பினால் கூரை உடையும் தருவாயில் இருக்கின்றது.  பெற்றோறோருக்கு நிம்மதியில்லை! நாம் 19-ம் நுற்றாண்டிலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நாம் வளர்கின்ற நாடா? வளர முடியாத நாடா?  இப்படித்தான் நாம் தொடர்ந்து  போய்க்கொண்டிருக்கப் போகிறோமா?

தமிழனே நிமிர்ந்து நில்! உயர்ந்து நில்! மற்றவனைக் குறைச் சொல்வதை நிறுத்து! உனது வாழ்க்கைப் பாதையை மாற்று! நான் ஏமாறுபவன் அல்ல! ஏமாற்றுபவனும் அல்ல!  உனக்கு என்று ஒரு வர்த்தகப்பாதையை ஏற்படுத்து! வர்த்தகத்தை வயப்படுத்து! வர்த்தகம் நமது நாடி நரம்புகளில் ஓடுகிறது! அதனை மேம்படுத்து!

எனக்கு எந்தத் தலைவனும் வேண்டாம்! நானே தலைவன்! நானே தலைவன்! நான் எனது சமுகத்தின் தலைவிதியை மாற்றியமைப்பேன்! எனது சமுகத்தை உயர்த்துவேன்!

எனது தமிழினம் தலை நிமிரும்! விரைவில்!



.