Wednesday 4 January 2017

கேள்வி - பதில் (41)


கேள்வி

சசிகலாவிற்கு அடிமட்டத்தில் எதிர்ப்புக்கள் காணப்படுகிறதே! இதனை அவர் எப்படி சமாளிக்கப்போகிறார்?

பதில்

ஆமாம்! பல இடங்களில் அ.தி.மு.க. தொண்டர்கள் அவருடைய சுவரொட்டிகளைக் கிழித்து போடுவதாக செய்திகள் வருகின்றன.

ஆனால் சசிகலாவிற்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல. முதல்வர் பன்னீர்செல்வமே அடங்கிப்போனார் என்றால் இந்தத் தொண்டர்கள் எம்மாத்திரம்? 

காவல்துறை அவர் பக்கம். அவர் சொல்லுவதை அப்படியே அவர்கள் நிறைவேற்றுவார்கள். அத்தோடு மட்டுமா? மன்னார்குடி என்பது அவருடைய ரௌடிக்கும்பல். மதுரையில் எப்படி ஒர் அஞ்சாநெஞ்சரோ அதே போல தமிழ் நாட்டுக்கு மன்னார்குடி ஓர் அஞ்சாநெஞ்சர்!

சசிகலாவிற்கு எந்தப் பிரச்சனைகள் வந்தாலும் அந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்கும் திறன் இந்த மன்னார்குடி கும்பலுக்கு உண்டு.

அடிமட்டத்தில் எங்கிருந்து எதிர்ப்பு வருகிறது என்று முதலில் ஆராய்வார்கள். பின்னர் அங்குள்ள வட்டம், மாவட்டம் அனைத்தையும் அலசுவார்கள். முதலில் பணத்தைக் கொடுத்து சரி பண்ண முயலுவார்கள். அதாவது சின்னம்மா தான் அம்மாவின் வாரிசு என்று அவர்களுக்கு ஓர் அழுத்தத்தைக் கொடுப்பார்கள். அடுத்த தேர்தலில் அவர்களுக்கும் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று பேரம் பேசுவார்கள்.

ஏற்றுக் கொண்டால் தொண்டனுக்கு நல்ல காலம். அந்த நல்ல செய்தியோடு பணமும் கிடைக்கும். ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அத்தோடு அவனது அரசியல் எதிர்காலம் ஒன்றுமில்லாமல் போகும்!

சசிகலா ஜெயலலிதா வழி வந்தவர்.  முப்பாதாண்டுகள் அவரோடு இருந்தவர். ஆக, கடைசிவரை அவருக்குக் கை கொடுத்தது அராஜகம் தான். அதனை அவர் எப்படியெல்லாம் கையாண்டார் என்பது சசிகலா நன்கு அறிந்தவர். ஆனால் அதே அராஜகம் கடைசியில் அவர் உயிருக்கே ஆபத்தாக அமைந்தது! வாள் எடுத்தவன் வாளால் சாவான் என்பார்கள்! அது தான் அவருக்கு நடந்தது!

சசிகலாவால் எல்லாப் பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். ஆனால் வழி நேர்மையாக இருக்காது! அவருடைய வழி என்பது அராஜகம் தான்!

No comments:

Post a Comment