Thursday, 12 January 2017

ஒரு பச்சிளங்குழந்தையின் சித்திரவதை

இன்று குழந்தைகளின் சித்திரவதை என்பது மிகவும் பரவலாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. என்ன தான் சட்டம் போட்டாலும் எந்தச் சட்டமும் சித்திரவதைகளை நிறுத்தியதாகத் தெரியவில்லை.

சில குழந்தைகளுக்கு அப்பன்மார்களே  எமனாக இருக்கிறார்கள். மனைவியிடம் சண்டை என்றால் குழந்தைகளுக்குத் தான் முதலில் ஆபத்து. குழந்தைகளை வைத்துக்கொண்டு அம்மாமார்களைப் பயமுறுத்துவது என்பது கணவர்களால் கடைப்பிடிக்கப்படும் மிக எளிதான வழி.

பாருங்கள் ஒரு தகப்பனை.  தகப்பனும் தாயும் பிரிந்து விட்டார்கள். ஆனால்அவனோ அந்தப் பெண் குழந்தையைத் தாயிடம் ஒப்படைக்காமல் தானே வளர்த்துக்கொள்ள அவனுடன் கொண்டு வந்துவிட்டான். வளர்க்க வேண்டும் என்பது அவனது நோக்கமல்ல. அந்தக் குழந்தையை வைத்துக்கொண்டு அந்தத் தாயைப் பழி வாங்க வேண்டும் என்பது தான் அவனது நோக்கம்.

என்ன செய்தான்?  குழந்தை குடிக்கும் பாலில் பெப்சிகோலாவைக் கலக்கிக் குடிக்கக் கொடுத்தான். குழந்தையை அருகில் வைத்துக் கொண்டு சிகிரட்டைப் புகைய விட்டான். குழந்தையின் கழுத்தை அமுக்கித்  திணர வைத்தான்.அழும் குழந்தையின் வாயை கைகளால் அடைத்து மூச்சுத்திணர வைத்தான். அந்தச் சிறு குழந்தை அப்பன் கையாலையே எல்லாச் சித்திரவதைகளையும் அனுபவித்தது.

குழந்தை படும் துன்பத்தை அவன் விடியோ படம் எடுத்து அவனது மனைவிக்கு அனுப்பி வைத்தான். தாயால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.


தாய் சிரியா நாட்டைச் சேர்ந்தவள். தகப்பன் சௌதியைச் சேர்ந்தவன். தாய் உடனடியாகக் காவல்துறையினருக்குப் புகார் கொடுத்தாள். காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தக் கயவனை விலங்கிட்டு விட்டார்கள்! இப்போது குழந்தை தாயிடம்.

தாயே!  நீ நீடுழி வாழ்க!


No comments:

Post a Comment