Sunday 29 January 2017

பாம்பு பிடிக்கும் தமிழர்கள்!


காக்கா பிடிக்கும் கலை எல்லாருக்குமே வரும்! ஆனால் பாம்பு பிடிக்கும் கலை எல்லாருக்கும் வராது. தமிழர்களுக்கு அது வரும் என்பதை அமெரிக்கர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பர்மிய மலைப்பாம்புகளின் நடமாட்டத்தால் பல வனவிலங்குகள் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன. மலைப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது!

அப்படி என்ன தான் நடக்கிறது?

மலைப்பாம்புகள் அங்கு வாழும் அனைத்து வன உயிரினங்களையும் கொன்று தின்று விடுகின்றனவாம்! அதனால் பாம்புகள் அதிகரித்தும் மற்ற உயிரினங்கள் அழிந்தும் வருகின்றனவாம்!

இப்போது புளோரிடா வனவிலங்கு காப்பகம் தடாலடியாக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருக்கிறது.  தமிழகம்,  இருளர் சமூகத்தைச் சார்ந்த இரு பாம்புப்பிடி  நிபுணர்களை வரவழைத்திருக்கிறது.  மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகிய இந்த இருவரும் பாம்புகளை வேட்டையாடுவதோடு பாம்புப் பிடிக்கும் கலையையும் அவர்களுக்குக் கற்றுத்தருவார்கள்!

பரவாயில்லையே! பெரிய படிப்பு படித்த வெள்ளைக்காரர்களுக்கு மலைவாழ் பழங்குடித் தமிழர்களிடம் படிப்பதற்கும் எதாவது இருக்கத்தானே செய்கிறது! நமக்கும் பெருமை தான்!



ஆனாலும் சொல்ல வேண்டிய செய்தி ஒன்று உண்டு. இந்த மலைப்பாம்புகள் புளோரிடா மாநிலத்தைச் சார்ந்த பாம்புகள் அல்ல! இவைகள் வந்தேறிகள்!  இந்த வந்தேறிகள் என்ன செய்தன? அங்குள்ள வனவிலங்குகள் அனைத்தையும் அழித்துக் கொண்டிருந்தன. காடுகளில் வழுகின்ற முயல் வகைகள், குருவி வகைகள் என்று அனைத்து விலங்குகளையும் கபளீகரம் செய்து கொண்டிருந்தன! இதனால் பாம்பு வகைகள் அதிகமாயும், அவர்கள் நாட்டு விலங்குகள் எண்ணிக்கை குறைந்தும் கொண்டு வந்தன.

இதனோடு நமது ஜல்லிக்கட்டு காளைகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.. வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீமை மாடுகளின் மூலம் நமக்கு என்ன கிடைக்கிறது? அதன் பால் நமக்கு நோயை உண்டாக்குகின்றன. பலவிதமான நோய்கள். அதில் புற்று நோயும் ஒன்று. அதன் சாணம் எருவாகப் பயன் படுவதில்லை. அது வெறும் சக்கை!

நமது நாட்டு மாடுகள் அப்படியா? நாட்டு மாடுகளின் பால் சத்துள்ள பால். அது உலக ரீதியில் முதலாம் வகை.ஏற்றுமதிக்கு மிகவும் தரம் உள்ள பால். தாய்ப்பாலோடு ஒப்பிடும் அளவுக்குத் தரம் வாய்ந்தது. அதன் சாணம் எருவாகப் பயன்படும்.  செயற்கை உரம் தேவை இல்லை. ஏற்கனவே நமது நாட்டு மாடுகளைக் கடத்தி மேல் நாட்டவர் உலக அளவில் பால் விற்பனைச் செய்து கொண்டிருக்கின்றனர். நாமோ, அவர்களின் மாடுகளைக் கொண்டு, வீட்டுப் பாலாகக் கூட பயன்படுத்த முடியவில்லை! அவர்கள் நமது மாடுகளை நம்மிடமிருந்து பிரித்து கோடிக்கணக்கில் பணம் பார்க்கின்றனர். நமது விவசாயிகிகள் அழிந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் மாடுகள் அவர்கள் மண்ணூக்கு உரியவை. நமது மாடுகள் நமது மண்ணுக்கு உரியவை. ஒவ்வொன்றும் அவை இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும். அது தான் நமக்கு இயற்கை சொல்லும் பாடம்.

No comments:

Post a Comment