Friday 6 January 2017

எலிகளின் அட்டகாசம்..இங்கேயுமா...?


ஆபத்து, அவசரம் என்றால் எங்கே போவோம்? அதுவும் இரவு நேரத்தில்..? நமக்கு தெரிந்தது எல்லாம்'செவன்  இலவன்' கடைகள் தாம். இருபத்து நான்கு மணி நேர சேவை தரும் இந்தக் கடைகள் நாடெங்கிலும் பரந்தும் விரிந்தும் மக்களுக்குத் தேவையான - ஆபத்துக்கும், தேவைக்கும் உதவி வருகின்றன.

அவர்களின் சேவைகளை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. அந்த இரவு வேலைகளில் வேறு எங்கும் கிடைக்காதப் பொருள்கள் - குறிப்பாக உணவுப் பொருள்கள் - அங்கு தான் கிடைக்கின்றன. அவர்கள் தருகின்ற சேவைகளில் நாம் பெருமைப் படுகிறோம்.

ஆனாலும் இப்போது வலைத் தளங்கலில் பரபரப்பாகப் பரவிக் கொண்டிருக்கும் ஒரு செய்தி நம்மைத் திகைக்க வைக்கிறது.  7-Elevan என்றாலே சுத்தத்திற்குப் பேர் போனது. அதன் சுத்தமும், பொருள்கள் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் நேர்த்தியும், அதன் குளு குளு சுற்றமும் ஒரு நிமிடம் நம்மை கிரங்கடித்து விடும்!


இந்த நிலையில் செவன் இலவனில் இப்படி எலியாரும் வருகையாளர்களில் ஒருவர் என்றால் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை தான். அதுவும் நாம் சாப்பிடுகின்ற உணவுப் பொருள்களை எலியாரும் சாப்பிடுகிறார் என்றால் .... கொஞ்சம் மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது!

இதைவிட நம்மை அஞ்ச வைப்பது  எலி கழிக்கும் சிறுநீர் தான். அது சாப்பிட்டுப் போட்டதை  நாம் சாப்பிடுவது நல்லதல்ல. அதுவே விஷம் தான். ஆனால் சிறுநீர் என்றால் அது மரணத்தைச் சம்பவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் இது ஏதோ அரிதான ஒரு நிகழ்ச்சி என்கிறார்கள் அந்த நிறுவனத்தார்.  நம்மால் எதையும் நம்ப முடியவில்லை. அந்த வலைப்பதிவாளர் இதனைப்படம் பிடித்துப் போடவில்லை என்றால் இது வெளியே வந்திருக்காது. இந்த பாமா (எலி) விஜயம் தொடர்கதையாகத்தான் இருந்திருக்கும்!

"ஒன்னுமே புரியலே உலகத்திலே!" என்று நாமும் சந்திரபாபு மாதிரி பாடிக்கொண்டு,  தலையை ஆட்டிக் கொண்டே போக வேண்டியது தான்! எத்தனை சட்டங்களைக் கொண்டு வந்தாலும் ஒரு சிலரைத் திருத்த முடியாது என்பார்கள்.

கிளானா ஜெயாவில் உள்ள இந்த 7-Eleven னும் ஒன்று! திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம்?


No comments:

Post a Comment