Thursday, 1 September 2016
கேள்வி-பதில் (29)
கேள்வி
கபாலியில் காட்டப்படும் பள்ளிக்கூடக் காட்சியான - மாணவர்களைக் கபாலி சந்திக்கும் காட்சியான அந்தப் பள்ளிக்கூடம் - மலேசியாவில் எடுக்கப்பட்ட காட்சியா?
பதில்
ஆம்! அந்தப் பள்ளிக்கூடக் காட்சி இங்கு மலேசியாவில் எடுக்கப்பட்டது தான். MySkills Foundation என்னும் பயிற்சி திறன் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி தான் அது.
கல்வியைத் தொடர முடியாத ஏழை மாணவர்கள், கட்டொழுங்கை மீறும் மாணவர்கள் என்று பல்வேறு பிரிவினர் இந்தப் பள்ளியில் பல்வேறு பயிற்சிகளைப் பெருகின்றனர். எல்லாமே அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிகள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அத்தனை பயிற்சிகளும் அங்கு வழங்கப்படுகின்றன. இது முற்றிலுமாக இந்திய மாணவர்களுக்கென நடத்தப்படும் பள்ளி.
இந்தப்பள்ளியின் இயக்குனர்கள் வழக்கறிஞர் பசுபதி அவர்கள், டாக்டர் ஷண்முகசிவா இன்னும் பலர் உள்ளனர்.
ஆரம்பகாலந்தொட்டே தமிழுக்கும், தமிழ்ப்பள்ளிகளுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் அயராமல், தளராமல் தொண்டு செய்து வருபவர் ஐயா பசுபதி அவர்கள். அரசாங்கம் மானியம் கொடுத்தால் மட்டுமே இந்தத் தட்டுக் கெட்ட சமூகத்துக்குத் தொண்டு செய்வோம் என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் தலைவர்களுக்கு மத்தியில் ஐயா பசுபதி அவர்களும் அவர்தம் குழுவினரும் தங்கள் சொந்தப் பணத்தைப் போட்டு இந்தச் சமுகத்திற்காக அல்லும் பகலும் உழைத்து வருகின்றனர். சமீப காலத்தில் தான் அரசாங்கம் இவர்களைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது. அதனால் இப்போது அரசாங்க உதவியும் கிடைக்கிறது.
கபாலி படத்தின் மூலம் இந்த MySkills Foundation பள்ளிக்கு ஒரு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. வாழ்க்கையில் மிகவும் பின் தங்கிய மாணவர்கள் இங்குக் கொடுக்கப்படும் வாய்ப்புக்களைப் பயன் படுத்தி தங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டும்.
தமிழுக்கும், தமிழ்ப்பபள்ளிகளுக்கும் நேரங்காலம் பார்க்காமல் இன, மான உணர்வோடு பாடுபட்டு வரும் பசுபதி ஐயாவுக்கும் அவர்தம் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்!
ஐயா அவர்கள் நலனுக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!
Labels:
கல்கண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment