Wednesday 21 September 2016

விலங்குகளின் தூதர் சௌந்தர்யா..!


விலங்குகளின் நல வாரியத் தூதராக, ரஜினியின் மகள், சௌந்தர்யா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆரம்பமே அவருக்குச் சரியாக இல்லை.  அவருடைய உருவப்பொம்மை எரிக்கும் அளவுக்கு நிலைமை போயிருக்கிறது!

அவரைத் தூதராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு ஒரு சில காரணங்களை வாரியம் குறிப்பிட்டிருக்கிறது. அவருக்கு அனிமேஷன் துறையிலும் கிராபிக்ஸ் துறையிலும் நிபுணத்துவம் உள்ளவர் என்பது அவர்களின் விளக்கம். சினிமாத்துறையில் உள்ளவர்கள் உண்மையிலேயே மிருகங்களை வதை செய்கிறார்களா அல்லது கிராபிக்ஸ் மூலம் அந்தக் காட்சிகளை எடுக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்துவதே அவரின் வேலை என்பதாக விலங்கினர் அறிவித்துள்ளனர்.

சௌந்தர்யாவின் நிபுணத்துவத்தைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. இந்தத் துறையில் யாரும் நிபுணத்துவம் உள்ளவர்கள் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் இவர்கள் ரஜினியின் மகளைத்  தூதராக அறிவித்திருப்பதில் நிச்சயமாக வேறு காரணங்கள் உண்டு. ரஜினியின் செல்வாக்கைப் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். ரஜினியின் மகள் என்னும் போது எதிர்ப்புக்கள் அதிகம் இராது அன்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் ஆரம்பமே சௌந்தர்யாவின் உருவப்பொம்மையை எரிக்கும் அளவுக்கு ஆரம்பம் ஆரம்பாமாகிவிட்டது!

எப்படியிருப்பினும் நாம் அந்தப் பிரச்சனையில் புக விரும்பவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த விலங்குகள் நலவாரிய அமைப்பினால் தமிழகம் பலவற்றை இழந்திருக்கிறது என்பதாக அந்த வாரியத்தின் மீது குற்றச் சாட்டுக்கள் உண்டு. குறிப்பாக நம் கண் முன்னே தெரிவது ஜல்லிகட்டு. ஜல்லிக்கட்டுக்கு எதிரான அமைப்பாக இந்த வாரியம் செயல்படுவதாக  அதன் மீது குற்றச் சாட்டுக்கள் உண்டு.

ஆனால் நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். நாம் நினைப்பது போல சௌந்தர்யா,  ரஜினியின் மகள் என்னும் ஒரு செல்வாக்கு உண்டு. தமிழகம் ஜல்லிக்கட்டுக்காக போராடிக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் ஐயாயிரம் ஆண்டு கலாச்சாரத்தைக் கொண்டது. அதனைச் சித்திரவதை என்று சொல்லி தடை செய்வதுற்கு எந்த வித நியாயமுமில்லை!  சௌந்தர்யா இதனை விலங்கினர்க்கு எடுத்துக் கூறி தமிழகத்தின் வீர விளையாட்டை மீட்டுக்கொடுக்க வேண்டும். இதுவே நமது வேண்டுகோள்.

விலங்குகளின் தூதராக மட்டும் அல்லாமல் தமிழர்களின் தூதராகவும் அவர் விளங்க வேண்டும் என்பதே நமது அவா! வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment