Friday, 19 May 2017
கேள்வி - பதில் (46)
தொடர்ச்சி - கேள்வி - பதில் (45)
தமிழ் நாட்டு அரசியலில் எதுவும் நடக்கும் என்பதால் ரஜினிக்கு நாம் செய்யும் பரிந்துரை இது தான்:
தமிழ் நாட்டு மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன் என்று சொல்லுகிறீர்கள். உங்கள் மனைவி ஒரு தமிழ்ப்பெண். நீங்கள் தமிழனாக மாறுவதில் எந்தச் சிரமமும் இல்லை.
முதலில் கோட்டையில் பணிபுரிபவர்கள் அனைவரும் தமிழர்களாக இருக்க வேண்டும். தமிழையும் படித்தவர்களாக இருக்க வேண்டும். சட்டமன்ற, நாடளுமன்றத்தில் இன்னும் அதிகமானத் தமிழர்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். மேற்கு வங்காள அரசு போல எல்லா மொழிப்பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப் பட வேண்டும்.
மதுக் கடைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட வேண்டும்.வெளி நாட்டுக் குடிபானங்கள் தடைசெய்யப்பட்டு உள்ளுர் குளிர்பானங்கள் ஊக்குவிக்கப்பட வேள்டும்.
கர்னாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிடையே உள்ளப் பிரச்சனைகள் களையப்பட வேண்டும். களையப்பட முடியாத நிலையில் எதுவும் இருந்தால் அந்தந்த மாநிலங்களுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். கடுமையான நடவடிக்கைகள் இல்லை என்றால்; எல்லாப் பிரச்சனைகளும் காலங்காலமாக அப்படியே நிற்கும். தீர்வு பிறக்காது.
மீனவர் பிரச்சனை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். ஒரு மீனவர் சுடப்பட்டாலும் உடனடியானத் தாக்குதலை ஆரம்பிக்க வேண்டும். 100 சிங்களவர்களாது சுட்டுக்கொல்லப்பட வேண்டும். அதேபோன்று இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும். அது மத்திய அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை என்பதெல்லாம் சும்மா சாக்குப்போக்கு என்பது நமக்கும் தெரியும்.
நீங்கள் "44 ஆண்டுகள் தமிழ் நாட்டில் வாழ்கிறேன். நான் தமிழன் தான்" என்கிறீர்கள். நன்று! நன்று! கருணாநிதியும், ஜெயலலிதாவும் அப்படித்தான் சொன்னார்கள்! அவர்களால் தமிழன் ஏமாந்தான் என்பது தான் நிதர்சனம்!
ஒர் ஐம்பது ஆண்டுகள் நாங்கள் ஏமாற்றப்பட்ட ஒரு சமூகம். பிற மாநிலத்தவரை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பது என்பது இயற்கையே! காரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அனைத்தும் வெளிப்படையாகவே உள்ளது!
மொழியை இழந்தோம்; கலாச்சாரத்தை, பண்பாட்டை இழந்தோம்;. காடு மேடுகளை இழந்தோம்; ஆற்று மணலை இழந்தோம். இப்படி இழந்தோம், இழந்தோம் இழந்தோம்.....! வேறு எதனையும் இந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழர்கள் பார்க்கவில்லை.
நாங்கள் சொல்ல வருவது எல்லாம் இது தான்: ஏதோ உங்களைச் சுற்றியுள்ள சில பிராமணர்கள் சொல்லுகிறர்களே என்பதற்காக அரசியலுக்கு வராதீர்கள். அப்படியே நீங்கள் வந்தாலும் முதலில் அவர்களுக்குத்தான் முதல் ஆப்பு! அரசாங்கக் கோவில்களில் பிராமணர்கள் மட்டும் தான் அர்ச்சர்கள் என்பதை நீங்கள் மாற்ற வேண்டி வரும்! கபாலியில் நீங்கள் பேசிய வசனங்களை எல்லாம் அமல்படுத்த வேண்டி வரும்!
உண்மையைச் சொன்னால் அரசியல் உங்களுக்கு எந்த வகையிலும் சரிபட்டு வராது! அரசியலுக்கு வந்து கெட்ட பெயர் வாங்குவதைவிட சினிமாவே உங்கள் உலகமாக இருக்கட்டும்.
தமிழ் நாட்டில் இன்னொரு தமிழர் அல்லாதார் தமிழர்களை ஆள நினைப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. நாங்கள் அதனை எதிர்ப்போம்! உலகத்தமிழர்கள் அனைவருமே எதிர்ப்பார்கள் என்பதே உண்மை!
Labels:
கல்கண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment