Monday 22 May 2017

ரஜினி ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?


நான் ரஜினியின் ரசிகன். அவர் நடித்த கபாலி படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். ஒரு முறை தியேட்டரிலும் பல முறை இணையத்திலும் பர்த்தவன். அவர் நடித்த படங்களில் கபாலி படமே எனக்குப் பிடித்தமானப் படம்.

அவரின் ரசிகன் நான். அவ்வளவு தான். அதற்கு மேல் வேறு வகையான ஒட்டும் இல்லை உறவும் இல்லை!

இப்போது அவர் அரசியலுக்கு வந்தால் ...? நான் ஆதரிக்கவில்லை. ஏன்? தமிழகத்தை சினிமா நடிகர்கள் ஆண்டது போதும்.  கடந்த ஐம்பது ஆண்டுகள் அவர்களது ஆட்சி தான். இந்த ஐம்பது ஆண்டுகள் அவர்கள் தமிழகத்தை அப்படி ஒன்றும் பூத்துக்குலுங்கும் பூமியாக மாற்றி விடவில்லை!  உண்மையைச்  சொன்னால் ஐம்பது ஆண்டுகள் நிறைவில் தமிழகம் வறண்ட பூமியாக மாறிவிட்டது; விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துவிட்டன. தமிழகம்  சாராய வருமானத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது!

இவைகளே போதும். நடிகர்கள் நடிக்கத்தான் லாயக்கு என்று. ஒரு நாட்டை வழி நடத்த அவர்கள் தகுதி இல்லாதவர்கள்!

ரஜினி அரசியலுக்கு வந்தாலும் பெரிதாக ஒன்றும் நடந்து விடப்போவதில்லை. தமிழகத்திற்கு எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை.

அரசியலுக்கு வருபவர்கள் நேர்மையளர்களாக இருக்க வேண்டும். இந்த ஐம்பது ஆண்டுகளில் அப்படி யாரையும் நாம் பார்க்கவில்லை. அதனால் தான் நேர்மையைப்பற்றி பேசும் போதெல்லாம் கர்மவீரர் காமராஜர், கக்கன் காலத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம்.

ரஜினி நேர்மையாளரா என்று நமக்குத் தெரியாது. அவர் நடிக்கும் படங்களுக்கு அவர் எவ்வளவு பணம் வாங்குகிறார் என்று யாருக்கும் தெரியாது. அவர் படங்கள் வெளியாகும் முதல் சில நாட்களுக்கு அவருடைய ரசிகர்கள் அதிகமான விலை கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கிறார்கள். அரசாங்கம் கொடுத்திருக்கும் விலை வேறு. ஆனால் தியேட்டர்கள் கொடுக்கும் விலை வேறு.  இந்த "அதிகமான"  விலை என்பது கறுப்புப்பணம்.என்பதோடு மட்டும் அல்ல இந்தப்பணம் நடிகர்களுக்குத்தான்  போய்ச் சேர்கிறது என்று சொல்லப்படுகிறது! அப்படி என்றால் தனது ரசிகர்களுக்குக் கூட அவர் உண்மையானவராக  இல்லை!

தனது ரசிகர்களுக்கே இந்த நிலை என்றால் தமிழ் நாட்டு மக்களுக்கு அவர் எப்படி உண்மையானவராக இருப்பார்.......?

சினிமாவில் அவர் எப்படி நல்லவராக இருக்கிறாரோ அப்படியே இருப்பது தான் அவருக்கு நல்லது. மற்றபடி அவர் அரசியலுக்கு வருவது என்பது: ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு" கொடுத்த தமிழனை எட்டி உதைப்பதற்குச் சமம்!  கர்னாடக மாநிலத்தவர் தமிழருக்கு எதிராவனவர்கள் என்பதை உறுதிபடுத்துவதாக அமையும்!

அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்!

No comments:

Post a Comment