Friday 26 May 2017

கதறும் குடும்பத்தினர்....


ரேமன் கோ குடும்பத்தினர் கதறுகின்றனர். ஆனால் அவரைக் கடத்திய கல் நெஞ்சர்களுக்கு மனம் இறங்கவில்லை.

ஆம், போதகர் ரேமன் கோ கடத்தப்பட்டு 100 நாட்கள் ஆகிவிட்டன. இந்த நிமிடம் வரை அவரைப்பற்றி எந்த ஒரு தடையமும் - எந்த ஒரு த்கவலும் - இல்லை.

ஒவ்வொரு முப்பது நாட்களுக்குப் பிறகு நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு காவல்துறைத் தலைவர் "அங்கு ஒருவரை கைது செய்திருக்கிறோம்; இங்கு ஒருவரை கைது செய்திருக்கிறோம்" என்று தான் சொல்லுகிறாரே தவிர, வேறு ஏதும் நம்பிக்கை தரும் செய்திகளாக ஒன்றும் இல்லை.

அவரின் மனைவியும் பிள்ளைகளும் இந்தக் கடத்தல் சம்பவத்திற்குப் பின்னர் மன அமைதி இன்றி ஒவ்வொரு நாளும் இறைவனிடம் கையேந்தி நிற்கின்றனர்.ஒரு சமயப் போகதர், எத்தனையோ உடைந்த உள்ளங்களை உயர்த்திப் பிடித்தவர் இன்று யார் பிடியில் சிக்கியிருக்கிறார் என்பதை யாராலும் ஊகிக்க முடியவில்லை.

அவர் ஒரு தீவிரவாத மதக்கும்பலிடம்  சிக்கியிருக்கிறார் என்று சந்தேகப்பட்டாலும் அதனையும்  நிருபிக்க எந்த ஆதாரமும் இல்லை. வெறும் ஊகங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பது மட்டும் புரிகிறது.



வேறு கோணத்தில் பார்க்கும் போது ஒரு சமயப் போதகர் கடத்தலில் காவல்துறை மிகவும் பலவீனப்பட்ட நிலையில் உள்ளதோ என்று நாம் நினைக்கவும் தோன்றுகிறது. ஒரு கடத்தலை நூறு நாட்கள் ஆன பின்னரும் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால்......நாம் எப்படி அதனை ஏற்றுக் கொள்ளுவது?  காவல்துறையை விட கடத்தல்காரர்கள் பலம் வாய்ந்தவர்கள் என்று தானே அதன் பொருள்!

எது எப்படி இருப்பினும் நமது நாட்டு காவல்துறையை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். அவர்களின் நடவடிக்கையை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதற்கிடையே இந்தக் கடத்தல் சம்பவத்தை ரேமன் கோ குடும்பத்தினர் ஐநா சபைவரை கொண்டு சென்றிருக்கின்றனர்.

அவரின் விடுதலைக்காக நாமும் பிரார்த்திப்போம்!

No comments:

Post a Comment