Thursday 18 May 2017

மலேசிய ஐ..எஸ் பயங்கரவாதி தற்கொலை...?


மலேசியாவின் ஐ.எஸ் பயங்கரவாதியும் உலக அளவில் மிகவும்  ஆபத்தானவன் என்று கூறப்பட்ட முகமட் வாண்டி முகமட் ஜெடி கடந்த ஏப்ரல் 29 அன்று ஒரு  தீவிரவாதத் தாக்குதலின் போது சிரியா, ராக்காவில் கொல்லப்பட்டதாகக்  காவல் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபுபக்கர் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே வாண்டியின் மனைவி, நோர் மாமுடா ஆமட் இந்தச் செய்தியை வெளிபபடுத்திருந்தாலும் இப்போது இது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக டான்ஸ்ரீ காலிட் தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

முகமட் வாண்டி ஐ.எஸ். ,மலேசியப்பிரிவுக்குத் தலைமை வகித்தவன். மலேசியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை உருவாக்கவும் நாட்டில், கலவரங்களை ஏற்படுத்தவும்,  அதற்கான நிதி உதவிகளைக் கொடுத்து உதவவும் அவனது முக்கிய பணி. அவனோடு கைகோர்த்தவர்களில் சுமார் 300க்கும் மேற்பட்டோர்  இதுவரை இங்கு கைது செய்யபட்டுள்ளனர். இதில் ஒருசில காவல்துறையினரும்  அடங்குவர்.

வாண்டி,  மலாக்கா, டுரியான் துங்களைச் சேர்ந்தவன். இவனும் இவனது மனைவியும் 2014 -ம் ஆண்டு ஜனவரியில் சிரியாவிற்குப் பயணம் செய்தனர். இவர்களுக்கு அங்கேயே பிறந்த இரண்டு குழந்தைகள் உண்டு. இப்போது இவரது மனைவி என்ன சொல்லுகிறார்?  தனது கணவரின் பணி இப்படி இடையிலேயே போய்விட்டாலும் அவரின் பணியை நான் தொடருவேன் என்கிறார். அவரின் குழந்தைகளும் வருங்காலங்களில் தனது பெற்றோர்களின் பணியைத் தொடரும் வாய்ப்பும் உண்டு.


ஆனாலும் வாண்டியின் கடைசி காலம் மகிழ்ச்சியுடைதாக இல்லை. மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. காரணம் ஐ.எஸ். தலைவர்கள் எதிர்பார்த்தது போல் வாண்டியின் செயல்பாடுகள்  மலேசியாவில் சரியான பலனைத் தரவில்லை.  முற்றிலும் ஒரே இஸ்லாமிய சமூகமாக இருந்திருந்தால் ஏதாவது  பலன் கிடைத்திருக்கலாம்.

ஆனால் மலேசியா என்பது ஒரு சமயம் சார்ந்த நாடல்ல.  பல்வேறு  சமயத்தின்ர் வாழ்கின்ற நாட்டில் இது போன்ற தீவிரவாதங்கள் எடுபடாது என்பதை ஏனோ வாண்டி உணரவில்லை!

மலேசியாவில் வாண்டியின் மிகப்பெரும் சாதனை என்றால் அது ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் மட்டுமே! பூச்சோங்கில் அந்த வெடிக்குண்டு சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்தனர்.

வாண்டியின் மரணத்தில் கூட பல சந்தேகங்கள் உள்ளன.  தனக்குக் கொடுக்கப்பட்டப் பணத்தை தவறாகக் கையாண்டதாக ஒரு குற்றச் சாட்டு உண்டு. அதன் தொடர்பில் அவன் 'தேடப்பட்டு' வந்தாகவும் கூறப்படுகின்றது. அதனால் அவனே தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகின்றது.

இது ஒரு சோகக் கதை.மக்கள் அமைதியாக வாழ்கின்ற ஒரு நாட்டுலிருந்து இருபத்து நான்கு மணி நேரமும் குண்டு வெடிப்பும் கலவரமும் கொண்ட ஒரு நாட்டுக்குக் குடியேறும் போது அதன் எதிரொலி எப்படி இருக்கும் என்பதை இந்த் வாண்டியின் வாழ்க்கை அனைவருக்கும் நல்ல பாடம்!

No comments:

Post a Comment